India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வெளியுறவு அமைச்சகம், தபால் துறை இணைந்து திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்டல அளவிலேயே ஆவண சரிபார்ப்பு மையம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கி. டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் டி20ல் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரிலும் கே.எல்.ராகுலை கீப்பராக கொண்டுவரலாமா? என BCCI யோசனையில் உள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம், சாம்பியன்ஸ் ட்ராபி. அதிலும் பண்ட் வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. பண்ட்டிடம் என்ன பிரச்னை உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் மூவரில் யார் முக்கியம்?
தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
IND vs IRE மகளிர் அணிகள் மோதும் 2ஆவது ODI போட்டி இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், IND அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் IND முன்னிலை வகிக்கிறது. அதனால், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இன்று களமிறங்க உள்ளது. அதேபோல் தொடரை இழக்காமல் இருக்க அயர்லாந்து அணி கடுமையாக போராடும்.
ஆருத்ரா என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான நடராஜப் பெருமானின் உன்னத நடனத் திருக்கோலத்தை பதஞ்சலி & வியாக்ர பாதர் கண்டதை ஆருத்ரா தரிசனம் என்கிறார்கள். இந்த நாளில் (ஜன.,12) விரதமிருந்து, மாலையில் சிதம்பரம் சென்று நடராஜரைத் தரிசித்து, மகா அபிஷேகம், ஆராதனைகளில் பங்கேற்று, களி படைத்து வழிபட்டால் இன்னல்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.
தமிழ் தேசியத்தை இனவாதமாக மாற்ற சீமான் முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரபாகரன் எப்போதும் பிற மொழி, இன வெறுப்பில் ஈடுபட்டதில்லை எனவும், அவரது பெயரை சீமான் தனது நிலைப்பாட்டுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் திருமா தெரிவித்துள்ளார். மேலும், திராவிட எதிர்ப்பு தான் தமிழ் தேசியம் என முடிவு செய்ததுடன், அவ்வாறு இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் சாடியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களிடம் காங்கேசன்துறை முகாமில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
காலையில் சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஏதாவது இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.
பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு பஸ்கள் உள்பட 44,580 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கலை மக்கள் சாெந்த ஊரில் கொண்டாட, 10ஆம் தேதி முதல் நாளை வரை 21,904 பஸ்கள் இயக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். பொங்கல் முடிந்து பணியிடங்களுக்கு திரும்ப 15ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 22,676 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
IND vs ENG மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. நடைபெற உள்ளது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை ₹1,500ல் தொடங்கி ₹15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரின் மீலம் ஷமி அணிக்கு திரும்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.