News January 12, 2025
அனைத்து தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம்

543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வெளியுறவு அமைச்சகம், தபால் துறை இணைந்து திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்டல அளவிலேயே ஆவண சரிபார்ப்பு மையம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 8, 2025
மாதம் மாதம் ₹11,000 கிடைக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் மாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் இருக்கு போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News November 8, 2025
விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார் ரூம் மூலம் தவெக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் பணிகளை தினமும் விஜய் நேரடியாகவே கண்காணிப்பார் என்றும் மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வகையிலும் வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News November 8, 2025
நடிகை கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார்

நடிகை கௌரி கிஷனை உருவக்கேலி செய்த குற்றச்சாட்டில் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், காயப்பட்டிருந்தால் Sorry எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘தன்னுடைய கேள்வி தவறு’ என கூறாமல் இன்னமும் ‘தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என யூடியூபர் கூறுவதால் சரியான முறையில் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் சாடி வருகின்றனர்.


