India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

WC T20I தொடரில் நாளை இந்தியா நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டிக்கான பயிற்சி செஷனில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சுந்தர் பயிற்சியில் ஈடுபடுவார் என கேப்டன் SKY தெரிவித்துள்ளார். வரும் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள சூழலில், அதற்குள் அபிஷேக் குணமடைந்து அணிக்கு திரும்புவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விஜய்யை NDA-ல் இணைக்க பல திட்டங்களை தீட்டிய பாஜக கடைசியாக அவரிடம் மெகா டீலிங் ஒன்றை போட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் நிதி, DCM பதவி மற்றும் சில முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய ஒரு பெரும் பேரத்தை அமித்ஷாவே பேசினார் என்கின்றனர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே பாஜகவை ’கொள்கை எதிரி’ என விஜய் கூறிவருவதால் அமித்ஷாவிடம் விஜய் உறுதியாக ’நோ’ சொல்லியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. பிப்.17-ம் தேதி வரை இதற்கான முகாம்கள் நடைபெறவுள்ளன. 2-19 வயதுடைய குழந்தைகள் 2.1 கோடி பேருக்கும், 20-30 வயதுடைய பெண்கள்(கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 54.42 லட்சம் பேருக்கும் ‘Albendazole’ மாத்திரை வழங்கப்படவுள்ளது. இந்த மாத்திரை குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எந்த நாளிலும் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் நெய் தீபத்தை ஏற்றி வைக்கவும். கிழியாத வெற்றிலைகளை பன்னீரில் கழுவி, நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் தடவிக் கொள்ளவும். அதற்கு மேல் ஒரு குங்கும பொட்டை வைக்கவும். தாம்பூல தட்டில் வைத்து அதை மகாலட்சுமியாக பாவித்து, கீழ்வரும் மந்திரத்தை 108 முறை கூறி, மலர்களால் அர்ச்சனை செய்யவும். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. SHARE IT.

பாஜகவில் அண்ணாமலைக்கும் நயினாருக்கும் கடும் பனிப்போர் நிலவுவதாகவும், இதனால்தான் அண்ணாமலை தனக்கு கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து விலகினார் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கும், தனக்கும் எந்த பனிப்போரும் இல்லை என விளக்கமளித்துள்ளார். அத்துடன், கட்சி கொடுக்கும் வேலைகளை மட்டும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இன்று(பிப்.11) 1 அவுன்ஸ்(28g) $19 குறைந்து $5,036-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் 1 அவுன்ஸ் $1 குறைந்து $81 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் காலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலையில் மந்த நிலை நீடிப்பது கவனிக்கத்தக்கது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் தலைவர்களும் அடுத்த கட்ட பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கெனவே 181 தொகுதிகளில் பரப்புரையை முடித்திருந்த EPS, பிப்.15-ம் தேதி முதல் தனது தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார். அதன்படி, 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் பவானிசாகர் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

கோவை, திருப்பூரில் இன்று முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 20% உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்பனை சரிந்து ₹100 கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் தேக்கம் அதிகரிக்கும் என்பதால், 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் வாக்கு தவெகவிற்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் கூட திமுக அரசியல் செய்வதாக தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DMK அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மனதில் வைத்து வரும் தேர்தலில் ADMK கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்; தமிழகமும் வளர்ச்சி அடையும் என்றார்.

2021-ல் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு 5 தொகுதி ஒதுக்கிய திமுக, அதனை வரும் தேர்தலில் <<19072975>>4 முஸ்லிம் கட்சிகளுக்கு<<>> ( முஸ்லிம் லீக், மமக, SDPI, தமிமுன் அன்சாரி) பகிர்ந்தளிக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். இது இஸ்லாமிய கட்சிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு பெறுவோம் எனக் கூறியுள்ள ஜவாஹிருல்லா, தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.