India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶பிப்ரவரி 11, தை 28 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என காங்., MP மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு சிலர் பேசுகின்றனர்; அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்று கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக-காங்., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை; சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து செயல்படுவோம் என்றார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் நீக்கப்பட்டது விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில், இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை; வழக்கமான நடைமுறைதான் என்று RSS விளக்கமளித்துள்ளது. மேலும், கேசவவிநாயகம் இனி மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளராகவும், வட தமிழக செயற்குழு உறுப்பினராகவும் செயல்படுவார் எனவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1938 – பிபிசி தொலைக்காட்சி உலகின் முதல் அறிவியல் புனைகதை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.
1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா, சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1847 – தாமசு ஆல்வா எடிசன் பிறந்த தினம்
1977– இந்தியாவின் 5-வது ஜனாதிபதி பக்ருதின் அலி அகமது இறந்த தினம்
2001 – தமிழ் நடிகர் ஜெய்கணேஷ் இறந்த தினம்

உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் இல்லாததால் IJK-வில் இருந்து விலகுவதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அறிவித்துள்ளார். EPS-ஐ சந்தித்ததால், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட லீமா ரோஸை பாரிவேந்தர் அழைக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அவர், இணைப்பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசிக, காங்., இடையிலான மோதல் நீண்டுகொண்டே செய்கிறது. காங்., கட்சிக்குள் இருக்கும் குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பூசலை முதலில் செல்வப்பெருந்தகை சரிசெய்ய வேண்டும் என்று வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கம் இல்லை, அவருக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை கேள்வி எழுப்பினார். மேலும், திருமாவுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு இன்னும் செல்வப்பெருந்தகை வளரவில்லை என்றார்.

தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் அதிமுக சார்பில் பிப். 18ஆம் தேதி JJ-EPS Awards 2026 வழங்க இருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர் கட்டணம் செலுத்துமாறும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதை மறுத்துள்ள அதிமுக தலைமை, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

திமுக-காங்., இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்., மாவட்ட தலைவர்களின் 90% பேர், DMK கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என மேலிடத் தலைவர்களிடம் கூறியுள்ளார்களாம். தற்போதைய சூழலில் விஜய்யுடன் கூட்டணி வைத்தால், கணிசமான தொகுதியில் போட்டியிடலாம், வாக்கு வங்கியும் அதிகரிக்கும் எனவும் கருத்தை பதிவு செய்துள்ளார்களாம்.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம் *அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், வெளியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்த நிலையில் தற்போது நேரடியாக அரசியலில் களமிறங்கி இருக்கிறார். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் சபரீசன் பங்கேற்றுள்ளார். கட்சியினருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல் வேட்பாளர் தேர்விலும் சபரீசன் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.