India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாலை விபத்துகளில் பலியான 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மெர்ஸி உள்ளிட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் இது பேரிழப்பு எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. செல்போனை பிடுங்கி தண்ணீரில் வீசிய பெண்ணை, 13 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் சிறுவனின் போனை பிடுங்கி தண்ணீரில் வீசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்து விபரீத செயலில் ஈடுபட்ட சிறுவன், தற்போது போலீசாரின் பிடியில் சிக்கி இருக்கிறான்.
பெரும் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. போர்ப்ஸின் பட்டியலில் 902 பெரும் கோடீஸ்வரர்களுடன் USA முதலிடத்தில் உள்ளது. 902 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.581 லட்சம் கோடி. இதையடுத்து, சீனா 450 பேருடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 205 பேருடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. 205 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.80.41 லட்சம் கோடி ஆகும்.
பிஹார் முன்னாள் CM லாலு பிரசாத் (76) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் உடனடியாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவின் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். 1974 ஜூன் 21-ல் கச்சத்தீவை அப்போதைய PM இந்திரா காந்தி, தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தார். சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் இருந்ததால், இலங்கையுடன் நட்பு பாராட்ட அவர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட காலம் இந்தியாவுடன் இருந்த கச்சத்தீவு இலங்கை வசமானது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை திரும்பப் பெற வலியுறுத்தி அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியதாகவும், திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் நடைபெற்றதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக கருணாநிதியிடம் முன்கூட்டியே ஆலோசனை நடத்தியதாகவும், அவர் மறைமுக ஆதரவு அளித்ததாகவும் மத்திய அரசு அண்மையில் கூறியது. எது உண்மையோ?
அதிமுக – பாஜக கூட்டணியமைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பல தோழமைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு வலுவான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், திடீரென அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோவிடம் இருந்து 10 ஆண்டுகளாக உட்கட்டமைப்பு பகிர்வுக்கான தொகையை BSNL நிறுவனம் வசூலிக்காததால் மத்திய அரசுக்கு ரூ.1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ உடனான மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தை BSNL செயல்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. BSNL-ன் உட்கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் கூடுதல் தொழில்நுட்பத்திற்கு மே 2014 – மார்ச் 2024 வரை கட்டணம் விதிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
<<15965771>>’டாப் கன்’ திரைப்பட நடிகர் ‘வால் கில்மர்’ (65) இன்று காலை உயிரிழந்தார்<<>>. அவர், 2014ஆம் ஆண்டு முதல் தொண்டை புற்றுநோயால் அவதியுற்று வந்ததாக அவரது மகள் மெர்சைடிஸ் கில்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் திடீரென நிமோனியாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதற்கு அளித்த சிகிச்சை பலனளிக்காததால், அவர் உயிரிழந்ததாகவும் மகள் கூறியுள்ளார்.
நவீன உலகில் ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் விந்தணுக்கள் குறைபாடும் ஒன்று. அதனை தவிர்க்க, புகை, போதைப் பழக்கம், வெப்பச் சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். சிறுதானிய, புரத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். விதைப்பை குளிர்ச்சியை உணரும் உறுப்பு என்பதால், இறுக்கமான உள்ளாடை, ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.