News April 2, 2025
13 வயதில் கொலை… சிறுவனின் கண்ணை மறைத்த ஆத்திரம்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. செல்போனை பிடுங்கி தண்ணீரில் வீசிய பெண்ணை, 13 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் சிறுவனின் போனை பிடுங்கி தண்ணீரில் வீசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்து விபரீத செயலில் ஈடுபட்ட சிறுவன், தற்போது போலீசாரின் பிடியில் சிக்கி இருக்கிறான்.
Similar News
News January 24, 2026
சென்னையில் சிறப்பு முகாம்

சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இன்றும் நாளையும் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
News January 24, 2026
FLASH: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

கடந்த 20-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 5 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மத்திய அரசின் VB–G RAM G மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் பிப். இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலாக வாய்ப்புள்ளது.
News January 24, 2026
பேரவையில் Absent.. கட்சியில் Present ஆன EPS

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், 2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து EPS நேர்காணல் நடத்தி வருகிறார். தூத்துக்குடி, தி.மலை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் அவர் நேர்காணல் நடத்தி வருகிறார்.


