India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் வெப்பநிலை 42 டிகிரியை தொட்டது. மொத்தம் 10 நகரங்களில் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவானது. தர்மபுரி 40.7 டிகிரி, கரூர் பரமத்தி 40 டிகிரி, நாமக்கல் 41 டிகிரி, சேலம் 41.6 டிகிரி, தஞ்சாவூர் 40 டிகிரி, திருப்பத்தூர் 41.6 டிகிரி, திருச்சி 40.7 டிகிரி, திருத்தணி 40.4 டிகிரி, வேலூர் 41.3 டிகிரி என வெப்பம் பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பம் 39 டிகிரி என பதிவானது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ‘தமிழும் சரஸ்வதியும்’ மெகா சீரியல் இந்த மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. 700க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்திருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தீபக் தினகர், நக்ஷத்ரா நாகேஷ் நடித்த இந்த சீரியலை ச.குமரன் இயக்கி வந்தார். 2021ஆம் ஆண்டு இந்த சீரியலின் முதல் எபிசோடு ஒளிபரப்பானது.
மும்பைக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தும் டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா, 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 234 ரன்கள் குவித்தது. பின்னர், களமிறங்கிய டெல்லி அணிக்கு அழுத்தம் அதிகமிருந்தாலும் நிதானமான ஆட்டத்தை ப்ரித்வி ஷா வெளிப்படுத்தினார். பின்னர், பும்ரா வீசிய யார்க்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க ரூ.4.5 கோடியை நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் எடுத்துச் சென்றதை சுட்டிக்காட்டி, அவர் இந்த மனுவை வழங்கியுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியிலேயே டக் அவுட் (0) ஆனார். ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும், மறுபக்கம் அவ்வப்போது டக் அவுட் ஆகுபவர் சூர்யா. பல மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு இன்று அணிக்கு திரும்பிய அவர், அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கோடைக்காலம் தொடங்கியதால் நாட்டின் மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி பிப்ரவரியில் 13% அதிகரித்து 21.64 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் 19.15 மில்லியன் டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டின் ஏப்ரல் – பிப்ரவரி காலக்கட்டத்தில் மொத்தமாக 880.72 மில்லியன் டன் நிலக்கரி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்திருக்கிறது. அன்றைய தினம், கல்வி நிலையங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் செயல்படாது.
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வளர்ந்த பாரதம் என்ற கனவிற்காக செலவிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், 2047 என்ற இலக்கிற்காக 24/7 உழைத்து வருவதாக கூறினார். மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் உலக நாடுகளுக்கு நம் மீது நம்பிக்கை வரும். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் மகளிருக்கு நிகழும் அநீதிகளை நாடு பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சில உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், உடல்நிலை பாதிக்கும். அது எந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம். 1) கோழி இறைச்சி 2) கீரை 3) முட்டை 4) காளான் 5) சாதம் ஆகியவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், அதில் ஏற்படும் மாற்றங்கள் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறு போன்ற உடல்நிலை பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, கீரை மற்றும் எண்ணெய்களை மீண்டும் சூடாக்கினால் புற்றுநோய் ஆபத்து உள்ளது.
டாப் 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் கடந்த வார சந்தை மூலதன மதிப்பு ரூ.1.71 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் உள்பட மற்ற 6 நிறுவனங்கள் ரூ.78,127 கோடி சரிவை சந்தித்துள்ளன. டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, எல்ஐசி ஆகிய 4 நிறுவனங்கள் லாபம் ஈட்டின. மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன.
Sorry, no posts matched your criteria.