India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019ஆம் ஆண்டு செங்கல்லை வைத்து பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் பெருவெற்றி பெற்றது. அதன்பின், 2021ஆம் ஆண்டிலும் உதயநிதி செங்கல் பிரசாரம் செய்தார். திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்த வெற்றிகளுக்கு உதயநிதியின் பிரசாரம் கை கொடுத்ததாக திமுகவினர் சொல்வதுண்டு. அந்த வரிசையில் இன்று பெரியகுளத்தில் செங்கலுடன் பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த வார இறுதியான 29ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான ‘புனித வெள்ளி’ வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் பொது விடுமுறை என்பதால், அதனுடன் சனி, ஞாயிறு சேர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இந்த நாள்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்கள் மக்கள் நெருக்கடியுடன் காணப்படும். உங்களது பயணங்களை முன்கூட்டியே முறையாக திட்டமிடுங்கள்.
அர்ஜுனன் ஜூனியர் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘ஜீனி’ (Genie) என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி, கீர்த்தி ஷெட்டி, வாமிகா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் 1st லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போலி ஆவணம் மூலம் 21 லட்சம் சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதை மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அந்த ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், 21.08 லட்சம் சிம்கார்டு இணைப்புகளை ஆவணங்களுடன் மறுஒப்பீடு செய்யும்படியும், இதில் போலி என்பது உறுதியானால் இணைப்பை துண்டிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் குரூப் விவரங்கள் வெளியாகியுள்ளது. குரூப் A-இல், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும், குரூப் B-இல் சென்னை, பெங்களூரு, பஞ்சாப், குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், மற்ற குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். போட்டிகளை குறைக்கவே இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா (8), சரிகா (12) ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளை காப்பாற்ற முயன்ற பெற்றோர்கள் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் போனால் ₹20 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.
மும்மை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி கண்டதில்லை. 10 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோல்வியுற்று வரும் மும்பை அணி, இம்முறையாவது வெற்றியுடன் தொடங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்னை வந்தால் ஒழித்து கட்டுவோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். துரோகம் எந்த வடிவத்தில் வந்தாலும் நெஞ்சுறுதியுடன் வீழ்த்திக் காட்டுவோம் என்று கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைத்தார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் நாளை அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.