India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்மையில் நெல்லையில் நடந்த பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷா கூட்டத்தை பார்த்ததும் அப்செட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என அவரிடம் கூறப்பட்டதாம். ஆனால் அதில் பாதி பேர் கூட வராததால் பல இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ந்ததோடு, மாநாட்டில் பேசும்போது மொத்தக் கூட்டமும் கலைந்ததை கண்டு அவரே அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
*சிலர் மழையை உணர்கிறார்கள். சிலர் வெறுமனே நனைகிறார்கள்.
* உலகை அடைந்து உங்கள் ஆன்மாவை இழக்காதீர்கள். தங்கம் வெள்ளியை விட ஞானமே சிறந்தது.
* இசை குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அது உங்களை தாக்கும் போது உங்களுக்கு வலிப்பதில்லை.
* சிறையில் உழல்வதைவிட, போராடி மரித்துப் போ.
* நான் படிக்கவில்லை. தேடல் மட்டுமே என்னிடம் இருந்தது. படித்திருந்தால் நான் முட்டாளாகி இருப்பேன்.
ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலைப் பார்ப்பதில் முக்கியமானவர் வழக்கறிஞர் கே.பாலு என MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் எனச் சொல்லிக்கொண்டு அன்புமணியைத் தவறாக வழிநடத்துவதாகவும் கூறினார். பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி என்றும், அதை மறைத்து கே.பாலு போன்றவர்கள் வசதிக்கேற்ப பேசுவதாகவும் அதில் துளியும் உண்மை இல்லை என்றார்.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்.09-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி,
CM ஸ்டாலினை நேரில் சந்திக்க இன்று சென்னை வருகிறார். தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருகிறார்.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 437 ▶குறள்: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ▶ பொருள்: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.
தமிழில் ஒரு நடிகை 3 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று ஹிட். அந்த நடிகை யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை கல்யாணி பிரியதர்ஷன் தான். இவர் SKவுடன் ஹீரோ படத்தில் அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதனை தொடர்ந்து புத்தம் புது காலை, மாநாடு படங்களில் நடித்தார். இந்த இரண்டும் படங்களுமே ஹிட். தற்போது அவர் ரவியுடன் இணைந்து ‘ஜீனி’, கார்த்தியுடன் ‘மார்ஷல்’ படத்திலும் நடிக்கிறார்.
வரும் தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்க்கு என்ன தெரியும் என பலர் கேட்பதாகவும், கட்சி தொடங்கிய 7 மாதங்களில் NTR ஆட்சி அமைத்தார். ஆதலால் அரசியலில் எதுவும் நடக்கும் என கூறினார். EPS-யை முதல்வராக்க வேண்டும் என அண்ணாமலை பேசுவதை பார்க்கும் போது ஏன் அவர் இப்படி தடுமாறிவிட்டார் என தனக்கு தெரியவில்லை என்றார்.
▶ஆகஸ்ட் 24 – ஆவணி 8 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: துவிதியை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மைதானங்களில் எப்போதும் ஆவேசத்துடன் காணப்படக் கூடியவர். அவர் ஓய்வறையில் எவ்வாறு இருப்பார் என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். அதில் ஓய்வறையில் கம்பீர் ஜாலியான பாடல்களை கேட்டு உற்சாகமாக இருப்பார் என்றும், அனைவரையும் ஒரே வைப்பில் வைத்து கொள்வதில் கெட்டிக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனியர் வீரர்களுடன் ஜாலியாக பழகும் தன்மை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
மஹா அவதார் நரசிம்மா திரைப்படத்தின் வசூல் குறித்து hombale films அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 5வது வாரத்திற்குள் நுழையும் மஹா அவதார் நரசிம்மா திரைப்படம் இதுவரை உலகளவில் ₹278 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வரலாறு காணாத வசூல் சாதனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.