News August 24, 2025

நெல்லை கூட்டத்தால் அமித்ஷா அப்செட் என தகவல்

image

அண்மையில் நெல்லையில் நடந்த பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷா கூட்டத்தை பார்த்ததும் அப்செட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என அவரிடம் கூறப்பட்டதாம். ஆனால் அதில் பாதி பேர் கூட வராததால் பல இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ந்ததோடு, மாநாட்டில் பேசும்போது மொத்தக் கூட்டமும் கலைந்ததை கண்டு அவரே அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

Similar News

News January 14, 2026

₹1,000 உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

image

₹1,000 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சரும் விரைவில் இனிப்பான செய்தி வரும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை 50% உயர்த்தி ₹1,500 ஆக வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பையும் CM ஸ்டாலின் பொங்கல் தினமான நாளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

News January 14, 2026

இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

image

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க.. தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் *மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் *கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்

News January 14, 2026

‘ஆசிரியர் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பு’

image

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே பொறுப்பு என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும் வாழ்க்கையும் எப்படி புரியும் என அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கண்ணனின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!