News August 6, 2024
மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம்

கடலில் மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் படகு மீது, இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், மலைச்சாமி என்பவர் பலியான நிலையில், ராமச்சந்திரன் மாயமானார். கடந்த 5 நாள்களாக இந்திய கடலோர காவல்படையினர் தேடி வரும் நிலையில், அவர் இன்னும் கிடைக்கவில்லை.
Similar News
News October 15, 2025
BREAKING: பேய் மழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று முதல் தீபாவளி (அக்.20) வரை கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் மிக கனமழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கலில் கனமழையும் பெய்யக்கூடும். அதேபோல் நாளை சென்னை, காஞ்சி உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
₹565 கட்டினால் போதும் ₹10 லட்சத்துக்கான காப்பீடு!

போஸ்ட் ஆபீசின் காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ₹565 பிரீமியமாக செலுத்தினால், ₹10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்த காப்பீடு திட்டத்தில் சேர மருத்துவ சான்றிதழ் தேவையில்லை. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள Post Office-ஐ அணுகுங்கள். அனைவரும் பயன்பெறட்டும், SHARE பண்ணுங்க.
News October 15, 2025
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு தடையா?

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க மாநில அரசு சட்ட மசோதா தாக்கல் செய்யப் போவதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு நடந்த அவசரக் கூட்டத்தில் இதுபற்றி CM ஸ்டாலின் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி விளம்பரப் பலகைகள், பதாகைகள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இந்த மசோதா வருகிறதாம். இதுபற்றி மேலும் தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.