News February 14, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (13.02.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.மேலும், அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

விழுப்புரத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கடலூர் அருகே பரவனூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் த. கண்ணதாசன் இவரது மகள் விஷ்ணுபிரியாவுக்கும், விழுப்புரம் ஆசிரியர் நகரைச் சேர்ந்த விக்ரமனுக்கும் திருமணமாகி 11ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் விஷ்ணு பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக விஷ்ணுபிரியா தந்தை விழுப்புரம் தாலுகாவில் நிலையத்தில் புகார் அளித்தார்.

News February 14, 2026

விழுப்புரம்: கஞ்சா பொட்டலம் வீசிப் பழிவாங்க முயற்சி!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், வீட்டுமனை வாங்கிய ரூ.2 லட்சத்தை திரும்பத் தராமல் ஏமாற்றிய நாகராஜ், தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்திரிகா வீட்டில் கஞ்சாவை வீசி, அவர் மீது போலீசில் பொய்யான புகார் அளித்துள்ளார். போலிசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார், நாகராஜ் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 14, 2026

விழுப்புரத்தில் ரவுடி கொடூர கொலை!

image

விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தா.மெண்டல் கதிர் (எ) கதிரவன் இவர் மீது விழுப்புரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த பிப்.9 நள்ளிரவு விழுப்புரத்தில் ஒரு தேநீரகத்துக்கு சென்ற போது, மேகநாதன்,அன்பு இருவரும் தா.மெண்டல் கதிர் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த முயற்சி. மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையில் நேற்று (பிப்.13) உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை.

error: Content is protected !!