News November 29, 2024
பருப்பு விலை உயராதது இதனால்தான்!

மத்திய அரசின் நடவடிக்கையால் பருப்பு ரகங்களின் விலை உயரவில்லை என மினிஸ்டர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லரை விலை உயராமல் இருக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் அவ்வப்போது மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் சந்திப்பு நடத்துவதாகக் கூறினார். இதனால்தான் துவரம், உளுந்து, மைசூர் பருப்புகளின் விலை 3 மாதங்களாக உயரவில்லை என்றார்.
Similar News
News August 23, 2025
RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும்.
➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள்.
➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
News August 23, 2025
மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி (83) உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. நல்கொண்டா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்வான சுதாகர் ரெட்டி, 2012 -19 வரை இந்திய கம்யூ., கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
News August 23, 2025
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான தூதராகவும் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இவர் அரசுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கடந்த ஜன.20 முதல் ஜோர்கன் கே ஆண்ட்ரூஸ் இந்தியாவில் உள்ள USA தூதரகத்தின் இடைக்கால பொறுப்பாளராக உள்ளார்.