News November 29, 2024
பருப்பு விலை உயராதது இதனால்தான்!

மத்திய அரசின் நடவடிக்கையால் பருப்பு ரகங்களின் விலை உயரவில்லை என மினிஸ்டர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லரை விலை உயராமல் இருக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் அவ்வப்போது மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் சந்திப்பு நடத்துவதாகக் கூறினார். இதனால்தான் துவரம், உளுந்து, மைசூர் பருப்புகளின் விலை 3 மாதங்களாக உயரவில்லை என்றார்.
Similar News
News November 10, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மாற்றுக்கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் சிவநாதன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது சிவநாதனும் வெளியேறியுள்ளார்.
News November 10, 2025
கமல்ஹாசனின் அடுத்த பட டைரக்டர் இவரா?

ரஜினியுடன் இணையும் படத்திற்கு முன்பாக, ஒரு படத்தில் நடித்து முடிக்க கமல்ஹாசன் முடிவு எடுத்துள்ளாராம். அதன்படி, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ படங்களை இயக்கிய அருண்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதுதொடர்பாக, சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சண்டை கலைஞர்களான அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்மநபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரியவந்தது. அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.


