News September 30, 2025
Railway Station-க்கு இத எடுத்துட்டு போனா உயிருக்கே ஆபத்து

தண்டவாளத்துக்கு அருகில் உலோகத்தால் உருவாக்கப்பட்ட குடையை எடுத்துச்சென்றால் ஷாக் அடிக்கும் அபாயம் இருக்கிறதாம். ரயில் நிலையத்தில், மேல் செல்லும் கம்பிகளிலிருந்து ரயிலின் எஞ்சினுக்கு மின்சாரம் பாய்கிறது. இது தண்டவாளம் வழியாக நிலத்திற்கும் செல்லும். அப்போது தண்டவாளத்தின் அருகே நீங்கள் உலோக பொருளை வைத்திருந்தால் அதன்மூலம் உங்களுக்கு ஷாக் அடிக்கலாம். உயிர்காக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News September 30, 2025
Women’s WC: இந்தியா 269 ரன்கள் சேர்ப்பு

மகளிர் உலக கோப்பையில், இலங்கைக்கு இந்தியா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இனோகா ரனவீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 125 ரன்னுக்குள் 6 விக்கெட்களை இழந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஸ்நே ரானா அதிரடி காட்ட இந்தியா 47 ஓவர்களில் 269 ரன்கள் ஸ்கோர் செய்தது. முன்னதாக மழை குறுக்கீட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டன.
News September 30, 2025
டிகிரி முடித்தால் ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News September 30, 2025
சர்ச்சை ட்வீட்.. ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பாய்ந்தது

சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, நேபாள் போல தமிழகத்திலும் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் X-ல் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை நீக்கியிருந்தார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக அவர் மீது, சென்னை காவல்துறை வழக்குப்பதிந்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.