India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விராட் கோலியின் பார்ம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரும் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கோலி நல்ல பார்மில் இருப்பதாகவும், ஐபிஎல்லில் 500 ரன்கள் வரை குவித்திருப்பதாகவும் தெரிவித்தனர். கோலியுடன் இணைந்து ஓப்பனிங் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு, சூழ்நிலைக்குத் தகுந்தபடி முடிவெடுக்கப்படும் என்றார் ரோஹித்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு ரிங்கு சிங், கேஎல் ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மாவும், அகர்கரும் விளக்கமளித்துள்ளனர். ரிங்கு சிங் தவறு இழைக்கவில்லை என்றும், மேலும் ஒரு பவுலர் தேவை என்பதாலேயே அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ராகுலை விட பண்ட், சாம்சன் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால் 2 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8இல் வெற்றி பெற்றுள்ள RR அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல, 9 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி பெற்ற SRH அணி புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று சூறைக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் தமிழகத்தில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்தச் சூழலில் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, நாமக்கல், வேலூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குநர் நெல்சன், கவின் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஃபிளெமென்ட் பிக்சர்ஸ்’ என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள நெல்சன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரிக்க உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், மே 3ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். கவின் நடிக்கும் படம் தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க உள்ளார்.

பக்தி மார்க்கமாக வெள்ளியங்கிரி மலை ஏறியவர்களில் இந்த ஆண்டு மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சோளிங்கர் மலை ஏறிய ஒருவர் மரணமடைந்திருக்கிறார். வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில் மலையேறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. உடல் உஷ்ணமடைதல், நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை உயிரையே பறிக்கலாம். முறையான பயிற்சி இல்லாதவர்கள் மலையேறுவதைத் தவிர்த்திடுங்கள். பொதுநலன் கருதி வெளியிடுவது Way2News.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணையவழி சூதாட்டம், பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, இந்தத் தடையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீறுவோருக்கு 1-3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ₹5-₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் வெளிநாடு செல்ல அனுமதி பெறவில்லையென வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ம.ஜ.த வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம், ‘ராஜாங்க பாஸ்போர்ட் வைத்துள்ளதால் அவருக்கு ஜெர்மனி செல்ல விசா தேவையில்லை. பிரஜ்வாலின் பாஸ்போர்ட்டை முடக்க நீதிமன்றம் இதுவரை உத்தரவிடவில்லை’ என விளக்கமளித்துள்ளது.

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை Red ஆகக் காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதைத் தடுக்க EVM வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது டிரோன் பறக்கத் தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளை Red Zoneஆக அறிவித்து, அவற்றின் மீது டிரோன் பறப்பதற்குக் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

மற்றொருவர் தலைமையில் விளையாடுவது தனக்குப் புதிதல்ல என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன், அதைக் கடந்த ஒரு மாதமாக மீண்டும் செய்ய முயற்சித்தேன்” எனக் கூறினார். மேலும், கேப்டன் பொறுப்பு என்பது வந்து போகும், அது கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.