News October 19, 2025

விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் EPS தான் CM

image

தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News October 19, 2025

சோகத்தில் ஆழ்த்திய Ro- Ko!

image

ஆஸி., எதிரான முதல் ODI-ல் இந்திய அணி 21/2 என தள்ளாடி வருகிறது. ரோஹித் 8 ரன்களிலும், கோலி ரன் இன்றியும் அவுட்டானது ரசிகர்களை பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் Ro- Ko பெரிதாக சாதிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், அனைத்தும் சொதப்பி விட்டது. கில் 9* ரன்னிலும், ஷ்ரேயஸ் ஐயர் 2* ரன்னிலும் களத்தில் உள்ளனர். மீளுமா இந்தியா?

News October 19, 2025

தங்கம் விலை மளமளவென குறைந்தது.. காரணம் என்ன?

image

தங்கம் விலை கடந்த 17-ம் தேதியுடன்( ₹97,600) ஒப்பிடுகையில் சவரனுக்கு ₹1,600 குறைந்து ₹96,000-க்கு இன்று(அக்.19) விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததே நேற்றைய விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது. இதனால், தீபாவளியான நாளை தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

பட்டாசு வெடிக்கும்போது இதையெல்லாம் செய்யாதீங்க

image

நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. *பட்டாசுகளை வாயில் வைத்தோ (அ) கையில் வைத்தோ வெடிக்கக்கூடாது. *மின்கம்பங்கள் அருகே வெடிக்க வேண்டாம். *வாகனத்திற்கு மேல் (அ) உள்புறம் வைத்து வெடிப்பது ஆபத்து. *பட்டாசு வெடிக்கும்போது அருகே சானிடைசர் வைத்திருக்க வேண்டாம். *தீப்பெட்டிக்கு பதிலாக அகர்பத்தி, மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.

News October 19, 2025

ஏமாற்றிய ரோஹித்!

image

14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ரென்ஷாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 13/1 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கில் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

News October 19, 2025

முடிவுக்கு வந்தது AFG-PAK போர்!

image

ஒரு வாரமாக நடந்து வந்த ஆப்கன் – பாக் போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கன் பதிலடி கொடுக்கப்படும் என கூறியதால், நிலைமை கைமீறி போய்விடக்கூடாது என்பதற்காக கத்தார் & துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளது.

News October 19, 2025

மூலிகை: மந்தாரையின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.

News October 19, 2025

திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாற்றுக்கட்சிகளில் முக்கிய முகமாக இருப்பவர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

News October 19, 2025

3 நாள்களில் 6.15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

image

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் 6,15,992 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News October 19, 2025

அடுத்த மதுரை மேயர் யார்?

image

மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அப்பதவிக்கான ரேஸில் 5 பேர் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 79 – வது வார்டு கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, 32 வது வார்டு விஜய மௌசுமி, ரோஹினி, வாசுகி சசிகுமார் ஆகியோர் பெயரை தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!