India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. வ.விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வருவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி ராமநாதபுரத்தில் மட்டும் 2000-க்கு அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது, அங்கிருந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், அவரே பாஜக தலைவராக தொடர வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பியதால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை அமைதியாக இருக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினார்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் அமலாகவுள்ளது. இனப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கடலில் மீன்பிடிக்க பகுதி வாரியாக தடை விதிக்கப்படும். அந்த வகையில் புதுச்சேரி பகுதிக்கு இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் ஏப்.15 முதல் தொடங்குகிறது. மற்றொரு பகுதியான மாஹேவுக்கு ஜூன் 1 முதல் தடைக்காலம் அமலாகிறது.
சென்னையில் அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற இருந்த மேடையில் இருந்த பேனர் மாற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. இன்று பாஜக கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காததால், அந்த பேனர் மாற்றப்பட்டது. இருப்பினும் ஜி.கே.வாசன் அமித்ஷாவை சந்திக்க வருகை தந்துள்ளார்.
அனைவருக்குமே முதுகுவலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட தொலைவு பயணம், கனமான பையை சுமப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிந்தவரை திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடைபயிற்சி போன்ற பயிற்சிகளை செய்யலாம். பாயில் தரையில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.
தமிழக பாஜக தலைவருக்கான விருப்பமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், தி.நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன் சென்றார். அப்போது வாசற்படியை தொட்டு வணங்கியபடி கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தவரை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பிற்பகல் 2 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் கமலாலயத்திற்கு படையெடுத்தனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகையும், விளம்பர மாடலுமான லூசி மார்கோவிக்(lucy markovic) உடல்நலக்குறைவால் காலமானார். 27 வயதான லூசி மார்கோவிக்கின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. Australia’s Next Top Model நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், Armani, Versace உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் மாடலாகவும் இருந்து வந்தார். #RIP
சிக்கன் பிரியர்களுக்கு தான் இது சூப்பர் நியூஸ். சிக்கன் டேஸ்டில் டூத் பேஸ்ட் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பிரபல KFC நிறுவனம், ஆஸ்திரேலியாவின் பல் மருத்துவ கம்பெனியுடன் சேர்ந்து, இந்த பேஸ்ட்டை உருவாக்கியுள்ளது. இதில், 11 மூலிகைகள் இருப்பதால், டேஸ்ட் மட்டுமின்றி, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது எனக் கூறுகிறார்கள். விற்பனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே இது விற்று தீர்ந்து விட்டது. யாராவது வாங்க போறீங்களா?
2026 தேர்தல் கூட்டணி பேச்சுக்காக சென்னை வந்துள்ள அமித்ஷாவின் திட்டம் அடுத்தடுத்து மாற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பகல் 12 மணிக்கு ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ எனக் குறிப்பிட்டு பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த மேடை தற்போது மாற்றப்பட்டு LED திரை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாலையில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திப்பதாக இருந்த நிலையில், இப்போதே அவரை சந்தித்துள்ளார்.
உ.பி.யில் 19 வயது இளம் பெண்ணை 23 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற PM மோடி, விமான நிலையத்திலேயே போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். எதிர்காலத்தில் இப்படியொரு சம்பவம் நிகழாத வண்ணம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.