India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக மாநாட்டில் உரையாற்றிய போது பல இடங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசிய விஜய், ’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட பாடலையும் பாடினார். பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் வைத்திருக்கும் மறைமுக உறவை ஒழிக்க மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கவேண்டும் எனக் கூறிய அவர், நீட் ரத்து, மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பல கோரிக்கைகளை வைத்தார்.
நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இதில், தேர்வாகும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை(ஆக.22) முதல் செப். 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ₹50 கட்டணத்துடன் HM-களிடம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT.
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.
பதிவுத் தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் தனது தபால் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் Ex.வான்படை அதிகாரி ஒருவர். 1972-ல் புனேவின் தேசிய டிபென்ஸ் அகாடமியில் இருந்து, தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் அனுப்ப ’கேடட்ஸ் மெஸ்’ எனும் தபால் பெட்டியை பயன்படுத்தியிருக்கிறார். இதனை நினைவுகூர்ந்த அவர் அப்பெட்டி கடிதங்களின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.
தீபாவளி, சத் பண்டிகைகளையொட்டி நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அக். 13 முதல் 26-க்குள் புறப்பட்டு, நவ. 17 முதல் டிச.1-க்குள் திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெலிகிராம் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படும் சாதாரண செயலி அல்ல. இதில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1.YSaver – இந்த Bot-ல் உங்களுக்கு தேவைப்படும் யூடியூப் Link-ஐ கொடுத்தால் அது அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொடுக்கும். 2.AI IMAGE GENERATOR – இதில் AI புகைப்படங்களை இலவசமாக பெறலாம். 3.Learn Languages AI – இதில் பல மொழிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். SHARE.
பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறாவால் ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்த போது அதன் காலில் துண்டுச் சீட்டு இருந்தது தெரியவந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் உண்மையான மிரட்டலா ? அல்லது வெற்று மிரட்டலா ? என விசாரணை நடத்தப்படுகிறது.
‘மிரட்டல்’ படத்தின் கதையை கூறியபோதே சிக்ஸ் பேக் வைக்கட்டுமா என அஜித் கேட்டதாக A.R.முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அஜித் இவ்வாறு கூறிய பின்பே சூர்யா, ஆமிர் கான் ஆகியோர் சிக்ஸ் பேக் வைத்ததாகவும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும், இப்படத்தில் கமிட்டான பிறகு எடுக்கப்பட்ட 2 நாள் காட்சிகள் தற்போதும் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். இப்படமே பின்னாளில் ‘கஜினி’யாக ரிலீஸானது.
பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுக்கு தலா 5,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகை நாளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ₹10,000 கோடி தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம். தீபாவளிக்கு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநாட்டில் அதிமுகவை விமர்சித்த விஜய்க்கு, இபிஎஸ் பதிலளித்துள்ளார். பாசிச பாஜகவுடன் அடிமைக் கூட்டணி வைத்திருப்பதாக அதிமுகவை விஜய் மறைமுக சாடினார். இந்நிலையில், விஜய் அறியாமையில் பேசுவதாக இபிஎஸ் கவுன்ட்டர் கொடுத்துள்ளார். யாராலும் கட்சி தொடங்கியதும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வந்த உடனேயே முதல்வராகவில்லை எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.