India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ் மிகவும் சோம்பேறி என தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதிலும் அவர் சோம்பேறியாக இருப்பதாக கூறிய ராஜமெளலி, ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் பேசுவது பெரிய வேலையாக இருப்பதால், திருமணம் செய்யாமலேயே இருக்கிறார் என கிண்டல் செய்தார். 44 வயதான பிரபாஸுக்கு எப்போது திருமணம் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் 195 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் காலை 6 மணியளவில் திடீரென தீ விபத்து நேரிட்ட நிலையில், பலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இந்த கோர விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ கடந்த நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு தொலைபேசியில் பேசி வருகிறது. மேலும் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி தேவைப்படுவோர் +965-65505246 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 53 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

பொதுத்துறை வங்கியான SBI-யில், ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 150 இடங்களுக்கு ஜூன் 27 வரை sbi.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலுக்கு தனி மதிப்பெண் உண்டு. ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் பணிபுரிய வேண்டும்.

ஓராண்டுக்கு மேலாகியும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை என, கடந்த திங்களன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜகவின் தாய் அமைப்பின் கவலையை உணர்ந்து, பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA அரசு எவ்வளவு நாள்கள் நீடிக்கும் என்பதை விட, நாட்டின் எதிர்காலத்தை குறித்தே தனது எண்ணம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இன்று உழவர்சந்தைகளில் சில காய்கறிகளின் விலை உயர்ந்தும், சில காய்கறிகளின் விலை குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பீன்ஸ் ₹180லிருந்து ₹165ஆகவும், பெரிய வெங்காயம் ₹80லிருந்து ₹55ஆகவும், இஞ்சி ₹320லிருந்து ₹220ஆகவும் குறைந்துள்ளது. பீட்ரூட் ₹50லிருந்து ₹82ஆகவும், முட்டைகோஸ் ₹60லிருந்து ₹65ஆகவும், கேரட் ₹90லிருந்து ₹115ஆகவும், தக்காளி ₹76லிருந்து ₹80ஆகவும் உயர்ந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் 15 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தகுதி சுற்றில், சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வாலறிவன், ரமிதா, சந்தீப் சிங், அர்ஜூன் பாபுதா, இஷாசிங், சரப்ஜோத் உள்ளிட்ட 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒலிம்பிக்கான இந்திய ஷாட்கன் அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராக 4ஆவது முறையாக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கள் தலைமை, மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும் என, வாழ்த்தியுள்ளார். மேலும், ஆந்திரா, தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.