India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களுக்காக ‘மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்’ என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. குறுகிய காலத்திற்கான இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் ₹1,000 முதல் ₹2,00,000 வரை முதலீடு செய்ய முடியும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகளாகும். கூடுதல் விவரங்களுக்கு தபால் நிலையங்கள், பொதுத்துறை வங்கிகளை அணுகவும்.

சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏழை சிறுமிகளிடம் பணத்தாசை காட்டி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்த 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் நதியா, ராமசந்திரன், தண்டபாணி, மாய ஒலி ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூ யார்க் மைதானத்தில் இன்று 25ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. A பிரிவில் இடம்பெற்றுள்ள IND, USA அணிகள் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நெட் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் USA, 2ஆவது இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், குமரி, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, மழையின்போது மரத்தடியின் கீழ் நிற்க வேண்டாம். மேலும், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு “விமான நிலையத்தில் குண்டுவெடிக்கும்” என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்திருக்க, பாஜக தற்போது விரும்பவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதன் எதிரொலியாகவே, பாஜகவின் செயல்பாடுகளை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சிப்பதாக கூறுகிறார்கள். தன்னுடைய அரசியல் செயல் திட்டங்களை பாஜக ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் எதிர்பார்ப்பதாகவும், பாஜகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தி கையில் வைத்திருக்கும் கருப்பு, சிவப்பு நிற பாக்கெட் சைஸ் இந்திய அரசியலமைப்பு புத்தகம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புத்தகத்தை 2009 முதல் ஈஸ்டர்ன் புக் கம்பெனி வெளியிட்டு வருகிறது. இதுவரை 16 பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகளாக 6,000 புத்தகங்கள் சராசரியாக விற்பனையாகி வந்ததாகவும், தற்போது அதன் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஈஸ்டர்ன் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

400க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம் என பாஜகவினர் பிரச்சாரம் செய்ததால்தான், தோல்வியை சந்தித்ததாக, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் வென்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள் எனவும், இடஒதுக்கீட்டை பறிப்பார்கள் என்றும், எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவே, மகாராஷ்டிராவில் NDA கூட்டணி குறைவான இடங்களில் வென்றதாகவும் கூறியுள்ளார்.

2023-24க்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூகத்திற்கு பயனளிக்கும் வகையிலான பாரம்பரிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றல் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் இருவருக்கு தலா ₹1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் பரிசாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.sciencecitychennai.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

மிகக் குறைவான பொருளாதார பாலின சமத்துவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா 2 இடங்கள் சரிந்து, 129ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஆண்கள் ₹100 சம்பாதித்தால், பெண்கள் ₹40 மட்டுமே சம்பாதிப்பதாக, உலகப் பொருளாதார மன்றத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் சூடான் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.