News April 30, 2024
10 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூரில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பெண் நக்சல்கள் உள்ளிட்ட 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் சடலங்களின் அருகில் கிடந்த ஏராளமான ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
Similar News
News December 10, 2025
Ro-Ko இல்லாமல் WC இல்லை!

2027 WC ODI-யை Ro-Ko குறிவைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு BCCI ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வி உள்ளது. ஆனால், எங்களை எளிதில் ஓரம் கட்டிவிட முடியாது என Ro-Ko நிரூபித்துள்ளனர். ODI பேட்டர்களின் தரவரிசை பட்டியலில், ரோஹித் முதல் இடத்திலும், கோலி 2-வது இடத்திலும் உள்ளனர். இதனை கொண்டாடும் நெட்டிசன்கள், இவர்கள் இல்லாமல் இந்தியாவுக்கு WC இல்லை என BCCI-யை டேக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 10, 2025
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள்

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், 2025-ல் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10-ல் எந்தெந்த பைக்குகள் இடம்பிடித்துள்ளன என்பதை, வரிசைப்படி மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 10, 2025
அதிருப்தியில் இருக்கிறாரா அதிமுக EX அமைச்சர்?

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக EX அமைச்சர் <<18519607>>மாஃபா பாண்டியராஜனும்<<>> TVK-ல் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ADMK பொதுக்குழுவில், 13-வது தீர்மானம் வாசிக்கப்பட்ட போது அதை முன்வைத்தவர்களில், மாஃபாவின் பெயரையும் சிவி சண்முகம் குறிப்பிட்டார். ஒருவேளை மாஃபா அதிருப்தியில் இருந்தால் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. எனவே, அவர் தவெகவில் இணைய வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


