India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வார விடுமுறையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு முன்பதிவு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் ஜூன் 16ஆம் தேதி இரவு 10:20க்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல் 11 மணிக்கு நாகர்கோவிலை அடையும். மறுமார்க்கத்தில் ஜூன் 15, 17 தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 1:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 3 மணிக்கு தாம்பரத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாள்கள் வழக்கம்போல விடுமுறை. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் திங்கள் கிழமை, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சனி, ஞாயிறு, திங்கள் என பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை வருகிறது.

பச்சை ரத்தம் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்துவருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனித உடலில் ஓடும் ரத்தமானது சிவப்பு நிறத்தில் இருந்தாலும், கடலுக்கடியில் சென்றால், அது பச்சை வண்ணம் கொண்டதாக காட்சியளிக்கும். காரணம் ஆழ்க்கடலில், 30 அடிக்கு கீழ் சிகப்பு நிற ஒளிகள் ஊடுருவி செல்வதில்லை. இதனால்தான், நம் கண்களுக்கு ரத்தமானது பச்சை நிறத்தில் தோற்றப் பிழையாக காட்சியளிக்கும்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘GOAT’. பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்திரி உள்பட பலர் நடித்துவரும் இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. வரும் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வரவிருப்பதால் விரைவில் ‘GOAT’ படத்தின் அப்டேட்களை எதிர்பார்க்கலாம் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். ஜூன் 22ல் ‘GOAT’ இரண்டாவது சிங்கிள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வர முடியாத பிடியாணையை நேற்று பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஜூன் 17 வரை எடியூரப்பாவை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

கோல்ட் பிளட்டில் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய தூண்டும் ஏ, பி போன்ற (RH காரணி) ஆன்டிஜென்களே இருக்காதாம். இதனால்தான் இந்த RH-NULL ரத்தத்தின் ஒரு துளி கூட தங்கத்தை விட மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்த வகை ரத்தத்தை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் தேவைப்படுபவர்களுக்கு உடனே ரத்தம் செலுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் வேண்டுகோள்
விடுகின்றனர்.

RH-NULL ரத்த வகையை, ‘கோல்ட் பிளட்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. முதன்முதலில் 1961 இல் ஆஸ்திரேலிய பழங்குடி பெண்ணிடம் மிக அரிதான இந்த ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 50-க்கும் குறைவான நபர்களிடம் மட்டும்தான் இவ்வகை ரத்தம் இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா? ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க கோரி, EPS, OPS, சசிகலாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர். மறப்போம்! மன்னிப்போம்! என்ற தத்துவத்தை மனதில் கொண்டு அதிமுக தலைவர்கள் ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே, அதிமுக தொண்டர்களின் எண்ணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மருத்துவ துறையில் 2,553 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். கடந்த மே மாதமே விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், கூடுதலாக 2 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதிகபட்சமாக 58 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆர்வமுடையோர் <

கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 10 நாள்களில் 1,026 பேர் டெங்குவாலும், 137 பேர் சிக்கன் குனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.