News May 3, 2024

ஏழைகளின் ஊட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு

image

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிலும் வெப்பம் அதிகரிப்பால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 20% விடுதிகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் விடுதிகளிலும் 40% முதல் 60% வரை வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.

Similar News

News November 14, 2025

தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை

image

3-வது சுற்று முடிவில் <<18283085>>1,273 வாக்குகள்<<>> பின்னடைவில் இருந்த தேஜஸ்வி யாதவ், 6-வது சுற்று முடிவில் 219 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். BJP-யின் சதிஷ் குமார் 23,312 வாக்குகள் பெற்றுள்ளார். குறைவான வாக்கு வித்தியாசமே உள்ளதால், இந்த ரகோபூர் தொகுதி முடிவில் நீண்ட இழுபறி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 14, 2025

தவெக கூட்டணியை விரும்புகின்றனரா காங்கிரசார்?

image

தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்., மாவட்ட நிர்வாகிகளிடையே ரகசிய சர்வே நடத்தப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதில், திமுக 40 தொகுதிகளை தரவில்லை எனில், தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே, டெண்டர் கிடைப்பதில்லை, திமுகவால் காங்.,கிற்கு வளர்ச்சி இல்லை என பல அதிருப்திகள் நிலவுகிறது. இது தொடர்பாக காங்., தேசிய தலைமை ஆலோசனை நடத்திவருகிறதாம்.

News November 14, 2025

தேர்தல் முடிவு.. அரசியலில் இருந்து விலகலா?

image

நிதிஷ்குமாரின் JD(U) கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றால், தான் அரசியலில் இருந்து விலகிவிடுவதாக பிரசாந்த் கிஷோர் சவால் விட்டிருந்தார். தற்போதைய நிலவரப்படி JD(U) 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, பிரசாந்த் கிஷோர் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று JD(U) கட்சியினர் கூறி வருகின்றனர். அதேநேரம், அவரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!