India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த ‘கருடன்’ திரைப்படம் ₹50 கோடி வசூலை பதிவு செய்யவுள்ளது. கடந்த மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. தொடர்ந்து 3ஆவது வாரமாக திரையரங்குகளில் ஓடிவரும் இந்தப் படம், இதுவரை உலகளவில் ₹42 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

*1244 – பாரிஸில் 12,000 யூத சமய
கையெழுத்துப்படிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. *1631 – மும்தாஜ் மகால் பிரசவத்தின்போது இறந்தார். *1794 – கோர்சிக்கன் அரசு அமைக்கப்பட்டது. *1885 – விடுதலை தேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது. *1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலைப் பெற்றது. *1950 – சொல்லாய்வறிஞர் அருளியார் பிறந்தநாள். *2021 – சாம்பியா விடுதலைப் போராளி கென்னத் கவுன்டா மறைந்தநாள்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சந்தை வாய்ப்பு உள்ளிட்ட ஆலோசனை வழங்க தமிழக அரசின் FaMe TN நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக மும்பையைச் சேர்ந்த INDIA SME AXIL நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து, விசாரணை நடத்திட வேண்டும் என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நீட் விவகாரத்தை பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செக்குடியரசின் கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் (26) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிராக் நகரில் நடந்த பெண்களுக்கான 75 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் லவ்லினா, சீனாவின் லி கியானுடன் மோதினார். வெற்றிக்காக போராடிய லவ்லினா, 2-3 என்ற கணக்கில் கியானிடம் தோல்வியடைந்து, 2ஆம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: பொச்சாவாமை ▶ குறள் எண்: 531
▶குறள்:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
▶பொருள்: மிகுந்த அக மகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அளவு கடந்த அடங்காத பெருஞ் சினத்தினால் ஏற்படும் தீமையைவிட பெருந்தீமையை விளைவிக்கும்.

நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டிய லத்தூர்லால் குஜ்ஜார் என்பவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சல்மானை, பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது என யூடியூப் சேனலில் குஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த குஜ்ஜாரை கைது செய்தனர். ஏப்ரல் 14ஆம் தேதி சல்மான் வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்தில் நடந்த உக்ரைன் அமைதி மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் புறக்கணித்துள்ளன. சுமார் 100 நாடுகளை சார்ந்த சர்வதேச அமைப்பு & பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்த மாநாட்டில், போர்நிறுத்தம் தொடர்பாக அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது போரில் தாக்கத்தை ஏற்படுத்துமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்களவைத் தலைவர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி களமிறங்கினால், INDIA கூட்டணி ஆதரவளிக்கும் என சிவசேனை (UBT) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பாஜக தன்னை ஆதரிப்பவர்களுக்கு துரோகமிழைக்கும் என்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பதாகக் கூறிய அவர், என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஜே.டி.யு & எல்.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.