News June 17, 2024

உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து விசாரிக்க வேண்டும்

image

நீட் குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நியமித்து, விசாரணை நடத்திட வேண்டும் என மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நீட் விவகாரத்தை பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 20, 2026

புதுகை: இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து அறிவிப்பு!

image

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தீவிர வாக்காளர் பட்டியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

News January 20, 2026

அமைச்சர் KN நேருவுக்கு புதிய சிக்கல்!

image

அமைச்சர் <<18786820>>KN நேரு<<>> மீது ஏற்கனவே டெண்டர், வேலைநியமன ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக ₹1 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி ED, TN அரசு மற்றும் DGP-யிடம் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுமார் 340 அதிகாரிகளின் இடமாற்றத்தில், ₹365 கோடி வரை பணமோசடி நடந்துள்ளதாக ஆதாரங்களை இணைத்துள்ள ED, உடனே FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.

News January 20, 2026

அவையில் கவர்னர் அவமதிக்கப்பட்டாரா?

image

பேரவையில் கவர்னர் ரவியின் மைக்கை பலமுறை ஆப் செய்து அவமதித்ததாக மக்கள் பவன் கூறியுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் TN அரசு தயாரித்த அறிக்கையில் உள்ளதாக கூறிய மக்கள் பவன், TN அரசு ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், முதலீடுகளில் TN 4-வதில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!