India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விக்கிரவாண்டியில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இடைத்தேர்தல் வெற்றிக்காக விக்கிரவாண்டியில் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வெற்றி பெறுவதற்காக திமுக எந்த எல்லைக்கும் செல்லும் என்றார். முன்னதாக, இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது எனக்கூறி அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோய்விடும் என்பதால் அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்புக்கு திமுகவை காரணம் கூறுவது வியப்பாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் மட்டுமே எம்பி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகக் கூறினார். பாஜகவுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகரும், பிக்பாஸ் 7 போட்டியாளருமான பிரதீப் ஆண்டனி, தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக X பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பலரது ஆதரவை பெற்ற அவர், சிலரது குற்றச்சாட்டுகளால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

T20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை மறுநாள் (ஜூன் 19) முதல் சூப்பர் 8 சுற்றுகள் தொடங்குகிறது. சூப்பர் 8ல் மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. குரூப் 1ல் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லிராணியை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். முதல்வர் கையில் காவல்துறை இருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் ஏன் தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

காஷ்மீரின் ரியாஸி பகுதியில் கடந்த 9ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 9 யாத்ரீகர்கள் பலியாகினர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வரும் நிலையில், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இதையடுத்து என்ஐஏ புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

பாபர் அஸாம் பாகிஸ்தான் அணியில் இடம்பெற தகுதியற்றவர் என்று ஷேவாக் விமர்சித்துள்ளார். முதல் 6 ஓவர்களில் 50-60 ரன்கள் எடுக்க முடியாத போது பாபர் ஓப்பனிங் இறங்கி என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய அவர், கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டால், பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பெற தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் பாபர் அஸாம், 4 ஆட்டங்களில் 122 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் வரும் 21ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 2 நாள்களுக்கு நகரின் சில பகுதிகளில்
இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யலாம் என கணித்துள்ளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை
37-38° C இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

பெரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே இருக்கிறது. இதனால், தொலை தூர நகரங்களுக்கு இடையே இந்த ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனை சரி செய்யும் வகையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை ஆகஸ்ட் 15 முதல் பரிசோதனை முறையில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னை – டெல்லி போன்ற தொலை தூர நகரங்களை இணைக்க முடியும்.

மேற்குவங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இவ்விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர், மோடி அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என்றும் உறுதி தெரிவித்தார். மோடி அரசின் நிர்வாக அலட்சியமே கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்ததற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.