India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மின்சார வாகனங்களுக்கான மானியம் பெறுவதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியுடன் மானியம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், மத்திய கனரக தொழில்துறை கூடுதலாக ₹278 கோடி ஒதுக்கீடு செய்து, கால அவகாசத்தை செப்.30 வரை நீட்டித்துள்ளது. டூவிலருக்கு ₹10,000 வரை, சிறிய 3 சக்கர மின்சார வாகனத்திற்கு ₹25,000 வரை, பெரிய 3 சக்கர வாகனத்திற்கு ₹50,000 வரை மானியம் பெறலாம்.

நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறியது முற்றிலும் தவறானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கூடுதல் நேரம் எடுத்த அனைத்து மாநில முதல்வருக்கும் நினைவூட்டலுக்காக ஓலி எழுப்பப்பட்டதே தவிர, யாருடைய மைக்கும் அணக்கப்படவில்லை என்றார். உண்மைக்கு புறம்பான தகவலை மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது, அது உண்மையல்ல என்றும் கூறியுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அறிமுக விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே 42 பை ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கி., அணியின் கீப்பர் லேஸ் ஆமெஸ் ஆஸி., எதிராக 1934இல் 37 பை ரன்களை விட்டுக் கொடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 90 ஆண்டுகள் கழித்து அந்த சாதனையை ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டே தற்போது முறியடித்து இருக்கிறார்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என கணித்துள்ளது. இதனிடையே, கரூர், தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றால், இலங்கையின் ஸ்பின்னர்களை அவர் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் தீக்ஷனா இருவரும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். குறிப்பாக, ஹசரங்காவிற்கு எதிராக 11 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு, 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விருதுகளுக்கு, ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பாடுபடும் தமிழறிஞர்கள், படைப்பாளர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. 2024க்கான தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர், நற்றமிழ் பாவலர், தூயதமிழ் பற்றாளர், தமிழ் ஊடக விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க <

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் முடங்கியதால், <<13718810>>ITR <<>>-ஐ தாக்கல் செய்ய முடியாமல், பலரும் புலம்பி வருகின்றனர். ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும். இதை தவிர்க்க பலர் ITR தாக்கல் செய்து வரும் நிலையில், தற்போது இணையதளம் முடங்கியுள்ளது. இதனால், ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

களத்திலும், களத்திற்கு வெளியேயும் ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டனாக இருந்ததாக இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரத்தில், மிகப்பெரிய பொறுப்பு இருப்பதையும் உணர்வதாக கூறிய அவர், ரோஹித் ஷர்மாவிடமிருந்து ஆடுகளத்தில் விளையாட மட்டுமல்ல, பண்போடு அணுகவும் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை கூற அமித் ஷாவுக்கு எந்த தார்மீக தகுதியும் இல்லை என என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். குஜராத்தில் இருந்து நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட அமித் ஷா, அடுத்தவர்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமித் ஷா போன்றவர்கள் நாட்டை தவறான பாதைக்கு அழைத்து செல்வதை அரசியில் ரீதியாக தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.