India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27,000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் அசோக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், யூனியன் பிரதேசங்களில் பாஜகவின் வளர்ச்சியை நேரடியாக காண முடிகிறது என்றார். இதனால் புல்வாமா, அனந்தநாக் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என ஒரே மாதத்தில் 27,000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் நெல்லை மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாரகை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.
கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சித்ரதுர்காவில் உள்ள போவி குர்பிரீத் மடத்திற்குச் சென்ற ராகவேந்திரா, ‘நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல், தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தம்’ என பாஜகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்.
எல்லாவற்றுக்கும் ஹர்திக் பாண்டியா தான் காரணமென விமர்சிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அணியாக சேர்ந்து தான் முடிவை எடுக்கிறோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்தது. இதற்கு, கேப்டன் ஹர்திக் பாண்டியாவே காரணமென சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியத்திற்கு பதிலாக வாழ்நாள் ஊதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO, வாழ்நாள் ஊதிய முறைக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இந்தியாவும் அங்கம் வகிப்பதால், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அமலானால் ஊதியம் பன்மடங்கு உயரும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
செந்தில், யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு, ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சங்கர் தயாள் எழுதி இயக்கும் இப்படத்தின் 1st லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. சகுனி படத்தைப் போலவே, இந்தப் படமும் நகைச்சுவை + அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளது. நடிகர் செந்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்புக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறிய ஐகோர்ட், தேர்தல் ஆணையத்தை நாடுவதற்கும் தடை இல்லை எனத் தெரிவித்தது. இதனால், தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பாய்மரப் படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் முறையீடு செய்துள்ளார். கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாதக மேல்முறையீடு செய்த வழக்கு நாளை (மார்ச் 26) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே, நாதகவிற்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை ஏற்காத நாதக, பாய்மரப் படகு சின்னம் கேட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் 2ஆம் கட்ட போட்டிகளின் அட்டவணை இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான விவரங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ▶குவாலிபையர் 1- நரேந்திர மோடி மைதானத்தில் வரும் மே 21. ▶எலிமினேட்டர்- நரேந்திர மோடி மைதானத்தில் மே 22. ▶குவாலிபையர் 2- சேப்பாக்கம் மைதானத்தில் மே 24, ▶இறுதிப்போட்டி- சேப்பாக்கம் மைதானத்தில் மே 26 அன்று நடைபெற உள்ளது.
நடிக்க வேண்டுமென்று இதுவரை முயற்சி செய்ததில்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இனிமேல் ஆல்பம் பாடல் குறித்து பேசிய அவர், “பாடலின் கதையை படித்துவிட்டு இயக்குநரையும், படக்குழுவையும் சந்தித்தேன். கடைசி வரைக்கும் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. படப்பிடிப்புக்கு செல்வதற்கு எனக்கு தைரியமே இல்லை. யாரும் காரி துப்பாத அளவிற்கு நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றார்.
Sorry, no posts matched your criteria.