News May 13, 2024

இதுதான் உங்கள் செயலாட்சியா?

image

கஞ்சா கடத்தல்காரர்களை கூடவே வைத்திருப்பவர்கள், கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கரை கைது செய்திருப்பதாக திமுக அரசை தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என முதல்வர் கூறுவதாகவும், ஆனால், காங். நிர்வாகி ஜெயக்குமார் இறந்து 7 நாள்களாகியும் துப்பு துலங்கவில்லை என்றார். வேங்கைவயல் வழக்கிலும் குற்றவாளியை பிடிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

Similar News

News December 15, 2025

திண்டுக்கல்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக தளம் வாயிலாக, இன்று (டிசம்பர் 15) மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுநருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News December 15, 2025

உதட்டளவில் சமூகநீதி பேசும் திமுக அரசு: அண்ணாமலை

image

100-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மாணவர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மாணவர்கள் முன்னேற்றத்தில் CM காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 15, 2025

BREAKING: பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.2-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன.4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது, புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது. புதுச்சேரியிலும் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!