India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் களைகட்டியுள்ள சூழலில், தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என்ற பெயரில் நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமண அழைப்பிதழ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்தப் பத்திரிகையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தேதி, வாக்குப்பதிவு நேரம் உள்ளிட்ட விவரங்களுடன், 100% வாக்குப் பதிவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
T20 கிரிக்கெட் போட்டியில் 1000 முறைக்கு மேல் பவுண்டரி விளாசிய வீரர்கள்…
*அலெக்ஸ் ஹேல்ஸ் – 1316 பவுண்டரிகள்
*டேவிட் வார்னர் – 1218 பவுண்டரிகள்
*ஜேம்ஸ் வின்ஸ் – 1164 பவுண்டரிகள்
*கிறிஸ் கெயில் – 1132 பவுண்டரிகள்
*பாபர் அசாம் – 1108 பவுண்டரிகள்
*ஆரோன் ஃபின்ச் 1095 பவுண்டரிகள்
*ஷிகர் தவான் – 1094 பவுண்டரிகள்
*விராட் கோலி – 1074 பவுண்டரிகள் *ஷோயப் மாலிக் – 1041 பவுண்டரிகள்
பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்றோடு முடிவடைந்திருக்கிறது. இதனையடுத்து, நாளை முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கெனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளன. அனைத்து வகுப்பினருக்கான தேர்வுகளையும் தேர்தலுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். நடிகர் ரஜினியும் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபடியே வண்ண பொடி பூசி ஹோலி பண்டிகையை கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் வீரர் பேர்ஸ்டோவின் கேட்சை பிடித்த அவர், ஐபிஎல் மற்றும் சர்வதேச T20 போட்டிகளில் அதிக கேட்சுகளை (173*) பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக அதிக கேட்சுகளை பிடித்த சுரேஷ் ரெய்னா (172), தற்போது 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 167 கேட்சுகளுடன் ரோஹித் ஷர்மா 3ஆவது இடத்தில் உள்ளார்.
பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ஒரு பக்கம் அதிரடியாக விளையாடினாலும், இன்னொரு பக்கம் விக்கெட்டுகளையும் இழந்து வந்தது. கேப்டன் ஷிகர் தவான் (45) பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 176 ரன்கள் குவித்தது. சிராஜ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மகளிருக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த முயற்சி எடுத்து வருவதாக சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி.கே.தனபாலன் தெரிவித்துள்ளார். 2025இல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு, மகளிருக்கு ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறும் முயற்சிகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
ரஜினியின் 171ஆவது படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தலைவர் 171 படத்தின் முன் தயாரிப்பு பணிகளுக்கே 4 முதல் 5 மாதங்கள் தேவைப்படுகிறது. படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த கதைக்காக 1.5 வருடம் கடுமையாக உழைத்துள்ளேன். இந்தப் படம் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு கைதி 2ஆம் பாகம் தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இன்ஜினீயரிங், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி படிப்புகளை திறந்தவெளி, தொலைதூரம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்வியில் அனுமதிக்க ஒழுங்குமுறை கவுன்சில், அமைப்புக்கு அனுமதியில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தெரிவித்துள்ளது. இதேபோல முனைவர், ஆராய்ச்சிப் படிப்பையும் இந்த முறையில் பெற தடை செய்துள்ளதாக UGC தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை <
வரும் மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபில் இறுதிப்போட்டியை காண வரும் பார்வையாளர்கள், தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர், அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை., அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.