News July 27, 2024

ஜம்முவில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

image

ஜம்மு-காஷ்மீரில் கார் கவிழ்ந்த விபத்தில், 5 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்த்நாக் மாவட்டம் தக்சும் என்ற இடத்தில் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த 8 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 27, 2024

பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெற்றி பெற்றுள்ளது. சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் இணை, முதல் போட்டியில் பிரான்ஸின் கோர்பி, லேபர் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இணை, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்தியது. அடுத்த சுற்று நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

News July 27, 2024

திமுக சொன்னதை செய்ய வேண்டும்: அன்புமணி

image

மின்சாரத் துறையில் நிர்வாக குறைவும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என அன்புமணி விமர்சித்துள்ளார். தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, மாதம்தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றார். உயர்த்தப்பட்ட 4.8% மின் கட்டணத்தை திருப்ப பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 27, 2024

இந்திய வீரர்களை கலங்கடித்த பத்திரனா

image

முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்களை தனது ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சால் பத்திரனா கலங்கடித்தார். தோனியிடம் கற்ற பாடம், இந்தியாவிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. குறிப்பாக, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகிய 4 முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் தான் இந்தியாவின் ஸ்கோர் 215க்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையென்றால் 250 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும்.

News July 27, 2024

இலங்கைக்கு இமாலய இலக்கு

image

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மிரட்டலாக விளையாடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 7 சிக்ஸ், 27 பவுண்டரிகளுடன் 213 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர். ஜெய்ஸ்வால் 40, சூர்யகுமார் யாதவ் 58, பண்ட் 49 ரன்கள் விளாசினர். அக்‌ஷர் படேல்
தனது பங்கிற்கு கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

News July 27, 2024

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணையில் நாளை நீர் திறப்பு

image

ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 7 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஆடிப்பெருக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, ஆடி மாதம் 18ஆம் தேதி புனித தலங்களில் நீராடி மக்கள் கொண்டாடுவர். இதையொட்டி, நாளை முதல் ஆகஸ்ட் 3 வரை, விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆக.3ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது.

News July 27, 2024

தேர்தல் முடிந்ததும் பாஜகவின் முகமூடி கிழிந்தது

image

மெட்ரோ, இயற்கைப் பேரிடர், தொழில் & நகர்ப்புர வளர்ச்சி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை. சுருக்கமாக சொன்னால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை என்று உதயநிதி விமர்சித்துள்ளார். தமிழ் – தமிழ்நாடு என பாசாங்கு செய்தவர்களின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது எனக் கூறிய அவர், மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

News July 27, 2024

மம்தா குற்றச்சாட்டுக்கு நிதி ஆயோக் விளக்கம்

image

நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க CM மம்தா பானர்ஜி பேசும்போது மைக் பாதியில் ஆஃப் செய்யப்பட்டது என்ற புகாருக்கு நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற 26 மாநில முதல்வர்களுக்கும் பேசுவதற்காக 7 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக, உணவு இடைவேளைக்கு முன்பு பேச அனுமதிக்க வேண்டும் என்ற மம்தாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவர் 7 நிமிடம் பேசினார் என விளக்கமளித்துள்ளார் .

News July 27, 2024

காசாவில் பள்ளி மீது தாக்குதல்: 30 பேர் பலி

image

மத்திய காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

News July 27, 2024

2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாகும்: பிரதமர் மோடி

image

2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதில் மாநில அரசுகள் முக்கிய பங்காற்றும் என்றார். சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளை வகுத்து, இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான படிக்கட்டாக இந்த கூட்டம் இருக்கும் என்றார்.

error: Content is protected !!