India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பரப்புரை செய்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கெனவே தஞ்சை, திருவாரூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் பரப்புரை செய்தார். இந்நிலையில், நெல்லை மற்றும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நாங்குநேரியில் பரப்புரையை துவங்குகிறார்.
பாஜக சார்பாக இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் வெற்றிபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019இல் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக அங்கு வெற்றி பெற்றது. ஆனாலும், 2021இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா சிங் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் வெற்றியை பறிகொடுத்த பாஜக, கங்கனா வழியாக மீண்டும் வெற்றி வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் மீதான பாஜக அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பில் மார்ச் 31-ல் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாளை (மார்ச் 26) பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.
அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் இராமநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, பொதுமக்களுக்காகப் பெரிதும் பணிகள் மேற்கொண்டிருக்கும் டாக்டர் இராமநாதன் வருகை, பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகை சாய் பல்லவி, திரைப்பட இயக்குநராக அவதாரமெடுக்கிறார். சிவகார்த்திகேயன், நாக சைதயன்யா படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார். நிதிஷ் கல்யாண் இயக்கவுள்ள ராமாயணம் படத்தில் சீதையாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதிய படத்தை இயக்க போவதாக சாய் பல்லவி அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களோடு உரையாட கந்தர்வர்களை பல்லி உருவத்தில் இறைவன் அனுப்புவதாக கௌரி சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய பல்லியை வணங்குவதற்காகவே செளந்தர்ய கயிலாயம் என்று ஞானநூல்கள் போற்றும் நெல்லையை அடுத்துள்ள முன்னீர்பள்ளம் ஸ்ரீபரிபூரண கிருபேஸ்வரர் கோவில் அம்பாள் கருவறையின் மேல் கூரையில் தனி சந்நிதானம் உள்ளது. இந்தப் பல்லியை தரிசித்தால் திருஷ்டிகள், தீவினைகள் போன்றவை முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
டிவிட்டரில் (எக்ஸ்) ஒரே நேரத்தில் திமுக, அதிமுக, நாதகவினர் மூன்று ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்கின்றனர். இபிஎஸ்ஸின் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் என்ற வாசகத்தை குறிப்பிட்டு அதிமுகவினரும், அதற்கு அடுத்தபடியாக பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுடன் திமுகவினர் #NoVoteToBJP, நாதகவினர் #சீமானே_எங்கள்_சின்னம் என்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்கின்றனர்.
அதிகளவில் கல்வி நிறுவனங்கள் உள்ள தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படும் தொகுதி திருநெல்வேலி. ஆலங்குளம், நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக வசம் தலா 2 தொகுதிகள் உள்ளன. இதுவரை இங்கு நடந்த 17 தேர்தல்களில் அதிமுக 7, காங். 6, திமுக 3, சிபிஐ ஒருமுறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக 1, 85,457வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து வடிவேலு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 2011 தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் இப்போது நடப்பது மக்களவைத் தேர்தல் என்பதால், கமல் பிரசாரம் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என பொருத்திருந்து பார்ப்போம்.
இணையவழி வர்த்தகத் தளமான அமேசான், தனது விற்பனையாளர்களுக்கான புதிய கட்டண முறைகளை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, நீண்ட கால கிடங்குக் கட்டணம், திரும்பி அனுப்பப்பட்ட பொருள்களுக்கான பணத்தை அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்த உள்ளது. இந்தக் கட்டண உயர்வால் அமேசான் மூலம் விற்கப்படும் பொருள்களின் விலை 5%-11% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.