India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி 20 உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கு பெறும் அணிகள் பிரத்யேக ஜெர்ஸியில் களமிறங்குவது வழக்கம். அந்த வகையில், இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜெர்ஸி மற்றும் வீரர்களுக்கான உபகரண உடைகளை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழாவில் ரோஹித் ஷர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கலந்து கொண்டனர். இந்திய அணி ஜூன் 5இல் தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாட உள்ளது.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
◾விளக்கம்: செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.
டி20 உலக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தலைமையில், ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ப்ரெட் கிளாசென், லோகன் வான் பீக், மைக்கேல் லெவிட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி(72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
இன்று (மே 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
திமுக தலைவர் ஸ்டாலினோ அல்லது ராகுல் காந்தியோ இந்தியாவின் பிரதமராக வர முடியுமா? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். INDIA கூட்டணி கட்சி தங்களின் பிரதமர் யார் என்று தெரியாமல் முழித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், வருடத்துக்கு ஒருவர் பிரதமராக வருவோம் என்பது இந்தியாவுக்கு நல்லதல்ல என்றார். அரசியலில் சுய நலத்துக்காக கூட்டணியை ஏற்படுத்தியவர்கள் வென்றதாக வரலாறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
✦கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் சில நேரங்களில் தனிமை தேவைப்படலாம். அப்போது அதற்கான இடைவெளியை கொடுங்கள்.
✦விரக்தியாக இருக்கும் நேரங்களில் வாதிடாமல் சற்று அமைதியாக இருப்பது நலம்.
✦சில திட்டங்கள் நிறைவேறாமல் போகும் போது பெரிது படுத்தாதீர்கள்.
✦ பரஸ்பரம் தம்பதிகள் விட்டுக்கொடுத்து வாழ பழக வேண்டும்.
இன்று (மே 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ஆம் கட்ட தேர்தலில் 63.04% வாக்குப்பதிவு
➤ நேரு செய்த தவறுக்கு மோடி பொறுப்பேற்க முடியாது – அமைச்சர் ஜெய்சங்கர்
➤ கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவுக்கு ஜாமின்
➤வாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி
➤ சசிகுமாரின் கருடன் திரைப்படம் மே.31இல் ரிலீஸ்
➤ நடப்பு ஐபிஎல்லில் இருந்து விலகினார் பட்லர்
ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் முன்பை விட சிறப்பாக வாக்களித்து ஊக்கம் அளித்ததற்காக அவர்களைப் பாராட்ட விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், மக்களின் ஊக்கம் மற்றும் திறன்களின் முழுமையான வெளிப்பாட்டைக் காண முடிந்ததாகக் கூறிய அவர், இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் நல்லது எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.