India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளையராஜா மீது எனக்கு பொறாமை இருந்ததே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், ” எனக்கு இசை பெரிதாக வராது. அதனால், அவர் மேல் என்றும் பொறாமை இல்லை. எனக்கு வராதது எல்லாம் அவருக்கு வருகிறதே என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பேன். அவருக்கு வரும் புகழையும் பல நேரம் நான் எனதாக்கி கொண்டு வருகிறேன். அவர் எங்கும் நிறைந்திருப்பார்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கோரியிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்தத் தேர்தல்களில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒதுக்கப்படவில்லை. இதனால்
அந்தத் தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை. இந்நிலையில், தினகரன் அளித்துள்ள பேட்டியில், “குக்கர் சின்னம் கோரியுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி – பிரேமலதா ஆகியோர் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் பிரேமலதா, நினைத்ததை சாதித்ததாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபராக 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு, புதினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதின் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யப் போரை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் தென்னிந்திய சினிமாவில் தான் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். அது யாஷின் ‘டாக்ஸிக்’ படமாகத் தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உதயநிதி தெரிவித்தது போல, திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதா, இல்லையா என கேள்வி எழுந்துள்ளது. அக்கட்சியின் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, வேட்பாளர்கள் தேர்வில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியிருந்தார். ஆனால், வேட்பாளர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்களே. இதனால், அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், வேர்க்குரு, நீர் கட்டி, கொப்பளங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய்களில் தர்கார்த்துக் கொள்ள, தண்ணீர், இளநீர், மோர், திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக இடங்களில் போட்டியிடுவதை காட்டிலும் எத்தனை இடங்களில் வெல்வோம் என்பதே முக்கியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் 2 இடங்களில் அமமுக போட்டியிடுகிறது. இது தொடர்பாக பேசிய அவர், “எங்களுக்கு அதிக இடங்கள் தருவதாக கூறினார்கள். ஆனால், கூட்டணிக்கு அதிக கட்சிகள் வந்ததால் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரு இடம் கொடுத்தால் கூட போதும் என்று பாஜகவிடம் முன்பே கூறிவிட்டேன்” என்றார்.
ஐபிஎல் தொடருக்கான 2ஆவது புதிய ஜெர்சியை பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும், 2 வெவ்வேறு நிற ஜெர்சிகள் அணிவதை RCB அணி வழக்கமாக கொண்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கான பிரதான (சிவப்பு) ஜெர்சியை நேற்று அறிமுகம் செய்த RCB அணி, இன்று பச்சை நிறம் கொண்ட 2ஆவது ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. பெயர் மாற்றம், 2 புதிய ஜெர்சிகள் என புத்தம் புதிதாக களமிறங்குவதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மோர்கன் சந்தை ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதம் குறைப்புக்கான சாத்தியம், சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்களில் அந்நிய முதலீடு 2% லாபம் பதிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.