News May 14, 2024
ஓட்டுக்கு பணம் தராததால் மறியல்

ஆந்திராவில் ஓட்டுக்கு கட்சிகள் பணம் தரவில்லை என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காக்கிநாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய பகுதிகளில் பணம் கொடுக்கவில்லை என்று கூறி மக்கள் வேட்பாளர்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வேட்பாளர் அலுவலகத்தில் திரண்ட மக்களை போலீசார் விரட்டியடித்தனர்.
Similar News
News December 10, 2025
தமிழகத்தின் ‘டாப் 7’ அமானுஷ்ய இடங்கள்!

மனிதனை எப்போதும் பயமுறுத்தும் விஷயம் பேய். அல்லுவிட்டாலும், பேய் படத்தை பார்ப்பவர்கள் விரும்புபவர்கள், வாழ்க்கையில் அந்த அமானுஷ்ய அனுபவத்தை பெற யாரும் விரும்புவதில்லை. ஆனால், தமிழகத்தின் இந்த இடங்களுக்கு சென்றால், நீங்கள் பேய் அனுபவத்தை பெறலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். அவை எந்தெந்த இடங்கள் என அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும். உங்களுக்கு பேய் அனுபவம் இருக்கா?
News December 10, 2025
விஜய் கட்சியில் இணைகிறாரா அதிமுக EX அமைச்சர்? (PHOTO)

அதிமுக EX அமைச்சர்கள் சிலரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். <<18518514>>ஒரு சிலரது பெயர்கள்<<>> அடிபட்ட போதிலும், யார் யார் என்ற விபரம் சஸ்பென்ஸாகவே உள்ளது. இந்நிலையில், EX அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தவெக முக்கிய நிர்வாகியான ராஜ்மோகன் இருவரும் சந்தித்த PHOTO வெளியாகியுள்ளது. அதிமுகவில் தற்போது சைலண்ட் மோடில் இருக்கும் பாண்டியராஜன் தவெகவில் இணைய உள்ளாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
News December 10, 2025
PM மோடியை எப்போது சந்திக்கிறார் மெஸ்ஸி?

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 3 நாள் பயணமாக டிச.13 அன்று கொல்கத்தா வருகிறார். தனது சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின், மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்துக்கு செல்கிறார். அங்கு, இரவு 7 மணிக்கு நடக்கும் நட்பு போட்டியில் பங்கேற்கிறார். இதனையடுத்து 2-வது நாள் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோவில் பங்கேற்கவுள்ளார். இறுதியாக டிச.15 டெல்லிக்கு சென்று PM மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார்.


