News May 14, 2024

பக்தர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் ஏகாம்பரேஸ்வரர்

image

ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரும் கொடுப்பினை! அப்படியான ஓர் அற்புத ஆலயம் தான் திருச்சிக்கு அருகில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். அற்புத சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், அருளும் பொருளும் அள்ளித் தரும் ஏகாம்பரேஸ்வரரின் அழகு, தரிசனம் என அனைத்தும் பிரமிக்க வைக்கும் அளவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

Similar News

News December 9, 2025

டாஸ்மாக் கடைகள் 8 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை TN அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), மார்ச் 31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி), அக்.2 (காந்தி ஜெயந்தி) நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் மூலம் தினமும் ₹100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது.

News December 9, 2025

குழந்தைகள் அறிவாளிகள் ஆக இந்த ஒரு பழக்கம் போதும்!

image

பெற்றோர்களே, உங்கள் குழந்தை புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு நிச்சயமாக இருக்கும். இதற்கு, ஓயாமல் நோண்டிக் கொண்டிருக்கும் செல்போன்களை ஓரங்கட்டிவிட்டு, அவர்களிடம் நல்ல புத்தகம் ஒன்றை கொடுங்கள். தினமும் இரவு நேரத்தில் 15 நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் புத்தக வாசிப்பில் ஈடுபடலாம். இதை தினமும் செய்துவர அவர்களின் அறிவுத்திறன் வளரும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News December 9, 2025

₹4,000 தரும் PM யாசஸ்வி திட்டம்.. அவகாசம் நீட்டிப்பு

image

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹4,000 வழங்கும் PM யாசஸ்வி உதவித் தொகை திட்டத்திற்கான புதுப்பித்தல், புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிச.15 வரை <>http://scholarships.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் 9, 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!