News March 21, 2024

வங்கிக் கணக்கு முடக்கம் கிரிமினல் குற்றம்

image

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய்களை குவித்துள்ளது. ஆனால், அடுத்தவர்களை ஊழல்வாதிகளாக காட்டுவதற்கு பாஜக அனைத்து வேலைகளிலும் ஈடுபடும். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் நாளேடுகள், தொலைக்காட்சியில் விளம்பரங்கள் செய்ய முடியவில்லை” என்றார்.

News March 21, 2024

பாஜக அபாயகரமான விளையாட்டை ஆடுகிறது

image

காங்கிரசின் வங்கிக் கணக்கை முடக்கி பாஜக அபாயகரமான விளையாட்டை விளையாடுவதாக அக்கட்சியின் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் 55% நிதி பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் 11% நிதி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், காங்கிரசின் வங்கிக் கணக்கை தேவையின்றி முடக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் வெற்றியை தடுத்து விடலாம்
என பாஜக நினைக்கிறது” என்றார்.

News March 21, 2024

பாஜக கூட்டணியில் தொடரும் இழுபறி

image

பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் தரப்புக்கு தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க பாஜக யோசித்து வருகிறது. அதே போல சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளை வழங்க மறுப்பதால் பாமக அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை தொகுதியை ஜி.கே.வாசனும் கேட்பதால் இந்த சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

News March 21, 2024

மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

image

வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து
கருத்துகள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 21, 2024

பாஜகவில் திருச்சி தொகுதிக்கு கோஷ்டி மோதல்

image

பாஜகவில் திருச்சி தொகுதியை குறிவைத்து கோஷ்டி மோதல் தொடங்கியுள்ளது. திருச்சியில் பாஜக நிர்வாகி ராம.சீனிவாசன் போட்டியிடுவதற்கு அக்கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள ராம.சீனிவாசன், “அரசியல் பணியாற்றுவோர் அந்த மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்” என பதிலடி கொடுத்துள்ளார்.

News March 21, 2024

தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகும் திரை நட்சத்திரங்கள்

image

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் சார்பிலும் பிரசாரம் செய்ய திரையுலக பிரபலங்கள் தயாராகி வருகின்றனர். திமுக சார்பில் வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், அதிமுக சார்பில் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், பபிதா, ஜெயமணி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக ராதிகா, குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய தயாராக உள்ளனர்.

News March 21, 2024

BREAKING: வீடு வீடாக வருகிறது..

image

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டுமென வீடு வீடாக சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

News March 21, 2024

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரம் தெரியுமா?

image

ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் நேரம், எந்தெந்தத் தொலைக்காட்சிகளில் நேரலையில் காணலாம் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் போட்டி மட்டும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மற்ற போட்டிகள், மதியம் 3.30 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஓடிடியிலும் நேரலையாக காணலாம்.

News March 21, 2024

ஆ.ராசாவை எதிர்த்து தனபால் மகன் போட்டி

image

அதிமுக நீலகிரி தொகுதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி தொகுதியும் அடங்கும். அத்தொகுதியின் எம்எல்ஏவாக தனபால் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீலகிரி தொகுதியில் இருந்து ஆ.ராசா 2 முறை (2009 & 2019) மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News March 21, 2024

திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே குறி

image

துரை வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். முன்னதாக அவர், வைரமுத்து வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். இதுதொடர்பான புகைப்படத்தை X-ல் பதிவிட்ட வைரமுத்து, “தீயின் பொறி திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே குறி, வெல்வார் துரை” என அவர் வாழ்த்தியுள்ளார்.

error: Content is protected !!