News May 14, 2024
மதியம் 1 மணி வரை மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
டிச.14-ல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

டிச.14-ல், திருவண்ணாமலை கலைஞர் திடலில், திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான முறையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 5, 2025
BREAKING: மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி

ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சூரி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சூரியின் ஷூட்டிங்கில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக, X தளத்தில் அவரை டேக் செய்து ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்கு, ஷூட்டிங்கில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சூரி குறிப்பிட்டுள்ளார். இனி கவனமுடன் இருக்க சொல்கிறோம், எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம் என சூரி குறிப்பிட்டுள்ளார்.
News December 5, 2025
தலைவர்கள் பின்னால் இருக்கும் செடியின் சிறப்பு தெரியுமா?

PM மோடி – புடின் பேச்சுவார்த்தையின் போது, அவர்களுக்கு பின்னால் இருந்த செடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. HELICONIA எனப்படும் இந்த செடி செழிப்பு, வளர்ச்சி, புது தொடக்கம், நல்லிணக்கத்தின் குறியீடாக உள்ளது. இதுபோன்ற முக்கிய தலைவர்களின் சந்திப்பின் போது, அங்கு எந்த ஒரு பொருளும் எதேச்சையாக இடம்பெறாது. எனவே ரஷ்யா – இந்தியா இடையிலான உறவு முன்னேற்றப் பாதையில் செல்வதை உலகிற்கு இது உணர்த்தியுள்ளது.


