India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உ.பி, பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், ம.பி மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட ம.பிக்கு 6 தொகுதிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில் ஒருகிலோ கறிக்கோழி (உயிருடன்) ₹108க்கு விற்பனையாகிறது. அதேபோல், எலும்புகள் இல்லாத கோழி கறி ஒரு கிலோ ரூ.210, கறி கோழி ஒருகிலோ ரூ.160, கோழி கல்லீரல் ஒருகிலோ ரூ.120, நாட்டுக் கோழி கறி ஒரு கிலோ ரூ.360, தோல் இல்லாத கோழி கறி ரூ.200க்கு விற்பனையாகிறது.
ஒரு காலத்தில் தனது கணவர் எனக்கு எதிரியாக இருந்தார் என நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். ‘என் கணவர் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை. எனக்கும் அவரைப் பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே எனக்கு எதிரியாகி விட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதைவிட மோசமானது வேறு என்ன இருக்க முடியும்? என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2010இல் சாம்ராட் தஹல் என்பவரை மணந்த அவர் 6 மாதத்தில் விவாகரத்து பெற்றார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாரா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மெரிக்காவில் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார். மியாமியில் கலந்துகொள்ளாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன் எனக் கூறிய அவர், ரசிகர்களின் ஆரவாரத்தை அனுபிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, நட்சத்திர விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகி அனுராதா படுவால் பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அனுராதா, அவரது தலைமையின் கீழ் பணிபுரிவது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்பாலைகள் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை தமிழில் 52 படங்கள் வெளியான நிலையில், ஒரு படம் கூட பெரிய வெற்றியைப் பெறவில்லை. புளூ ஸ்டார், லவ்வர் போன்ற ஒரு சில படங்கள் கவனம் ஈர்த்தன. பெரிய பட்ஜெட்டில் வெளியான கேப்டன் மில்லர், லால் சலாம், அயலான் போன்ற படங்கள் கூட பெரிதாக வெற்றிபெறவில்லை. GOAT, விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் படங்களைத்தான் கோலிவுட் பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்க எந்த படத்திற்கு வெயிட்டிங்?
அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓபிஎஸ் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் வாதாடினார். இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் சர்க்கஸ் போல் மகிழ்விக்கும் என்று ஆஸி.யின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவது புதிய சவாலாக உள்ளதாக கூறிய அவர், இந்த போட்டி உலகின் சிறந்த டி20 லீக் ஆகும் என்று தெரிவித்தார். 2014, 2015 சீசன்களில் ஆர்சிபிக்காக விளையாடிய ஸ்டார்க், தற்போது கொல்கத்தா அணி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.