News May 14, 2024

‘Play Off’ டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச் சுற்று 2 ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை (மே 15) வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப், பேடிஎம் இன்சைடர் மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

News May 14, 2024

அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருமை

image

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி நிறுவனம், அமெரிக்காவில் இசை பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த இசை தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும். அதில் ஒலிபரப்ப இந்தியாவில் இருந்து லகான், RRR, ஸ்லம்டாக் மில்லினியர் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், இரண்டு படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். RRR படத்திற்கு மட்டும் கீரவாணி இசையமைத்துள்ளார்.

News May 14, 2024

தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

image

மே 19ஆம் தேதி முதல் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கில் இருந்து வீசும் காற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பருவமழைக்கு சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

News May 14, 2024

ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு கேட்ட பவன் கல்யாண்

image

ஆந்திராவில் நேற்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் வாக்களித்தார். பின்னர், வெளியே வந்து அவர் அதிகாரிகளிடம் ஒப்புகைச் சீட்டு கேட்டார். ஒப்புகைச்சீட்டு கொடுக்கும் பழக்கம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர். ஒரு கட்சியின் தலைவருக்கே தேர்தல் நடைமுறைகள் தெரியவில்லை என்று மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

News May 14, 2024

சபரிமலையில் இன்று நடை திறப்பு

image

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ஆம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினம் என்பதால், நாளை முதல் 19ஆம் தேதி வரை காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

News May 14, 2024

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

image

ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். https;//ihpoe.mohfw.in/index.php இணையத்தில் மஞ்சள் காய்ச்சல் விவரங்களை அறியலாம்.

News May 14, 2024

பக்தர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் ஏகாம்பரேஸ்வரர்

image

ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரும் கொடுப்பினை! அப்படியான ஓர் அற்புத ஆலயம் தான் திருச்சிக்கு அருகில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். அற்புத சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், அருளும் பொருளும் அள்ளித் தரும் ஏகாம்பரேஸ்வரரின் அழகு, தரிசனம் என அனைத்தும் பிரமிக்க வைக்கும் அளவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

News May 14, 2024

தமிழில் 100 எடுத்து அசத்திய CBSE மாணவர்கள்

image

மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 2 ஆயிரத்து 129 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் 20 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பில் 8 பேர் மட்டுமே 100/100 எடுத்திருந்தனர்.

News May 14, 2024

இன்று முதல் “என் கல்லூரி கனவு” திட்டம் தொடக்கம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக இன்று முதல் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

News May 14, 2024

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவியின் இசைப் பயணம்

image

இசை மீது ஆர்வம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி, பல்வேறு அற்புதமான பாடல்களை பாடியுள்ளனர். குறிப்பாக, உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே, பிறை தேடும் இரவிலே, யாரோ இவன் யாரோ இவன், யார் இந்த சாலையோரம் பூக்கள் பூத்ததோ போன்ற பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இருவரும் தங்களது விவகாரத்தை அறிவித்த நிலையில், மீண்டும் இணைந்து பாடுவார்களா என்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

error: Content is protected !!