News May 14, 2024
சபரிமலையில் இன்று நடை திறப்பு

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ஆம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினம் என்பதால், நாளை முதல் 19ஆம் தேதி வரை காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
Similar News
News December 10, 2025
ODI கிரிக்கெட்டின் உச்சத்தை நெருங்கும் கோலி!

ODI பேட்டரிகளின் தரவரிசையில் கிங் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். SA-வுக்கு எதிரான தொடரில், 2 சதங்களும், ஒரு அரைசதமும் விளாசிய அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றிருந்தார். தரவரிசையில் அவர் 773 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்க, முதல் இடத்தில் ரோஹித் சர்மா(781 புள்ளிகள்) உள்ளார். ரோஹித்தும், கோலியும் ODI-யின் உச்சம் தொட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
News December 10, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க EPS வலியுறுத்தல்

2021-ல் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ₹2,500 வழங்கப்பட்டதாக இபிஎஸ் தெரிவித்தார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், இதுவரை திமுக ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தவில்லை என கடுமையாக விமர்சித்தார். மேலும், வரும் தைப் பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News December 10, 2025
கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: EPS

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை கூட விட்டு வைக்கவில்லை என EPS விமர்சித்துள்ளார். திமுக MLA செய்த கிட்னி திருட்டை, திமுகவே விசாரித்தது என்ற அவர், அதனால்தான் இவ்விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்தபின், கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.


