India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க பங்குச்சந்தையில் GameStop என்ற பங்கின் விலை நேற்று ஒரே நாளில் 74% உயர்ந்ததால் Short Sellers சுமார் $1 பில்லியன் (₹8000 கோடி) நஷ்டத்தை சந்தித்துள்ளனர். Short Sellers என்றால் பங்கை காலையில் அதிக விலைக்கு விற்றுவிட்டு, மாலையில் குறைந்த விலைக்கு வாங்குவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பங்கின் விலை உயரும்போது அவர்கள் நஷ்டமடைகின்றனர். குறிப்பாக, GameStop மாதிரியான நிகழ்வுகள் அபூர்வமானவை.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ₹53,520க்கும், கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,690க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ₹90.70க்கும், கிலோ வெள்ளி ₹90,700க்கும் விற்பனையாகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கிய இப்படத்தில், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காடுகளின் பின்னணியில் மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன் உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 8,11,172 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7534 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 1964 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, 241 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 187 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
▶கோயம்புத்தூர் – 96.02%
▶ஈரோடு – 95.56%
▶திருப்பூர் – 95.23%
▶விருதுநகர் – 95.06%
▶அரியலூர் – 94.96%
▶பெரம்பலூர் – 94.82%
▶சிவகங்கை – 94.57%
▶திருச்சி – 94.00%
▶கன்னியாகுமரி – 93.96%
▶தூத்துக்குடி – 93.86%
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், வேலூர் மாவட்டம் 84.40% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. திருவள்ளூர் – 85.54%, கள்ளக்குறிச்சி – 86.00%,
மயிலாடுதுறை- 86.39%, திருப்பத்தூர் – 86.88%, காஞ்சிபுரம் – 86.98%, திருவாரூர் – 87.15%, கிருஷ்ணகிரி – 87.82%, ராணிப்பேட்டை – 87.86%, புதுக்கோட்டை – 88.02%
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 85.75%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 98.09% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.61%, பெண்கள் பள்ளிகளில் 94.46%, ஆண்கள் பள்ளிகளில் 81.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*அறிவியல் பாடப் பிரிவுகள்- 94.31%
*வணிகப்பிரிவு பாடப்பிரிவுகள் – 86.93%
*கலைப் பிரிவுகள் -72.89%
*தொழிற்பாடப் பிரிவுகள் – 78.72%
▶இயற்பியல் – 97.23% ▶வேதியியல் – 96.20% ▶உயிரியல் – 98.25% ▶கணிதம் – 97.21% ▶தாவரவியல் – 91.88% ▶விலங்கியல் – 96.40% ▶கணினி அறிவியல் – 99.39% ▶வணிகவியல் – 92.45% ▶கணக்குப் பதிவியல் – 95.22%
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,84,351 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 3,35,396 (87.26%) பேரும், 4,26,821 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 4,04,143 (94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் (7.43%) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 8221 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 7,504 (91.27%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.