India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், முதல் அணியாக இலங்கை அணி WCஇல் கலந்துகொள்வதற்காக நியூ யார்க் கிளம்பியுள்ளது. இந்த தகவலை ஐசிசி தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
சைந்தவியும், நானும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம் என நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்களது 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாங்கள் இருவரும் சேர்ந்தே இந்த மாதிரியான ஒரு முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், இந்த கடினமான நேரத்தில் அனைவரது ஆதவும் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியது. 63ஆவது லீக் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அங்கு கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்றைய லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2024 ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
சிலருக்கு பழங்களை சாப்பிடுவது நல்லதா அல்லது பழங்களை ஜுஸ் செய்து குடிப்பது நல்லதா என சந்தேகம் இருக்கும். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஜுஸை காட்டிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது என தெரிய வந்துள்ளது. பழங்களில் இருப்பது போல பழ ஜுஸிலும் விட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கும். ஆனால் பழங்களில் இருக்கும் பைபர் சத்தானது, அதை ஜுஸ் செய்து சாப்பிடுவதால் கிடைக்காது என அந்த ஆய்வு கூறுகிறது.
அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும். அந்த வகையில் சிம்மம், தனுசு, கும்பம், மீன ராசியினருக்கு பணம் கொட்டப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், சிக்கல் இல்லாத பண வரவு போன்ற பல சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து KKR 19 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்திலும், GT 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மழை காரணமாக ரத்து செய்யப்படும் முதல் போட்டி இதுவாகும்.
மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஷாகின் அப்துல்லா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி, மத அடிப்படையில் மோடி பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையமே சட்டத்துக்குட்பட்டு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமென கூறி தள்ளுபடி செய்தது.
Department of School Education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக் கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும், வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒருமுறை தகவல் அனுப்பினால், பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும், இல்லையெனில் பல்வேறு நோய்கள் ஏற்படும் எனக் கூறுகிறது ஒரு ஆய்வு. அவ்வாறு 7 மணி நேரம் தூங்குவதால் கிடைக்கும் பலனை தெரிந்து கொள்வோம். *உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்கலாம் *நினைவு திறன் நன்றாக இருக்கும் *இதயம் நன்றாக இருக்கும் *சர்க்கரை அளவு சீராக இருக்கும் *மன அழுத்தம் நேரிடாது *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
அகமதாபாத்தில் மழை விடாமல் தொடர்ந்து பெய்துவருவதால் இன்றைய போட்டி இன்னும் தொடங்கவில்லை. மழை நின்றபின் மைதானத்தை தயார் செய்ய குறைந்தது 30 – 40 நிமிடங்கள் ஆகலாம். இரவு 10:56 மணிக்குள் மழை ஓய்ந்து மைதானம் தயாராகும் பட்சத்தில் இரு அணிகளும் 5 ஓவர் விளையாட அனுமதிக்கப்படும். இருப்பினும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்றைய போட்டி கைவிடப்பட அதிகம் வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.