India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு பயணச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதனை சீரமைக்கும் முடிவில் போக்குவரத்துத் துறை இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர், வட இந்தியாவில் உள்ள பிரச்னைகளும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளும் வேறு எனத் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் மக்கினாம்பட்டியில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 செ.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளன. கோவை மாவட்டம் ஆழியார், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தேனி மாவட்டம் வீரபாண்டி, நீலகிரி மாவட்டம் பார்வுட் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் GameStop என்ற பங்கின் விலை நேற்று ஒரே நாளில் 74% உயர்ந்ததால் Short Sellers சுமார் $1 பில்லியன் (₹8000 கோடி) நஷ்டத்தை சந்தித்துள்ளனர். Short Sellers என்றால் பங்கை காலையில் அதிக விலைக்கு விற்றுவிட்டு, மாலையில் குறைந்த விலைக்கு வாங்குவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பங்கின் விலை உயரும்போது அவர்கள் நஷ்டமடைகின்றனர். குறிப்பாக, GameStop மாதிரியான நிகழ்வுகள் அபூர்வமானவை.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ₹53,520க்கும், கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,690க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ₹90.70க்கும், கிலோ வெள்ளி ₹90,700க்கும் விற்பனையாகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கிய இப்படத்தில், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காடுகளின் பின்னணியில் மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன் உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 8,11,172 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7534 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 1964 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, 241 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 187 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
▶கோயம்புத்தூர் – 96.02%
▶ஈரோடு – 95.56%
▶திருப்பூர் – 95.23%
▶விருதுநகர் – 95.06%
▶அரியலூர் – 94.96%
▶பெரம்பலூர் – 94.82%
▶சிவகங்கை – 94.57%
▶திருச்சி – 94.00%
▶கன்னியாகுமரி – 93.96%
▶தூத்துக்குடி – 93.86%
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், வேலூர் மாவட்டம் 84.40% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. திருவள்ளூர் – 85.54%, கள்ளக்குறிச்சி – 86.00%,
மயிலாடுதுறை- 86.39%, திருப்பத்தூர் – 86.88%, காஞ்சிபுரம் – 86.98%, திருவாரூர் – 87.15%, கிருஷ்ணகிரி – 87.82%, ராணிப்பேட்டை – 87.86%, புதுக்கோட்டை – 88.02%
Sorry, no posts matched your criteria.