India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25 முதல், தமிழகத்தில் தண்ணீர்ப் பந்தல்களை உருவாக்கி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்க அறிவுறுத்தினார்.
லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிவரும் ருதுராஜ் அரைசதம் கடந்துள்ளார். தற்போது வரை 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகளுடன் 64* ரன்கள் அடித்துள்ளார். இதையடுத்து CSK அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிக முறை (17) 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக டு ப்ளஸி (16) உள்ளார். CSK 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலை செய்துகொண்டது வேதனையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெற்றோர்களே அனைத்துக்கும் காரணம் என சர்மிளா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவர்களை உடனே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போடப்பட்ட நிலையில், லக்னோ அணி டாஸை வென்றதுடன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த நிலையில், நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் ருதுராஜ், தொடர்ந்து 7 போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.
இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் 120 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனத்தைத் தாக்கும் இஸ்ரேலுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மேலும் 20 ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது. முன்னதாக, 30 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும், ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் பேசும் பாஜகவுக்குத் தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவர்களைத் தடுக்க இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அகதிகள் ஒரு படகில் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்றனர். அப்போது மணல் திட்டில் படகு மோதியதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் நாள்தோறும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்த அவர், வாக்கு வங்கிக்காகப் பாகிஸ்தான் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். பாஜக ஆட்சியில் புல்வாமா, உரி தாக்குதல்களுக்கு 10 நாளுக்குள் பதிலடி கொடுத்ததாகக் கூறிய அவர், மோடி பயங்கரவாதிகளையும், நக்சல்களையும் ஒழித்துள்ளதாகத் தெரிவித்தார்.
‘டாடா’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் அபர்ணா தாஸ். இவருக்கும், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், நாளை திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நலங்கு கொண்டாட்டங்கள் களைகட்டின. இந்தப் படங்களை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிரடியாக ஆடும் ஹர்திக் பாண்டியாவின் திறமை குறைந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். நேற்று RR அணிக்கு எதிரான IPL போட்டியில் MI அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாண்டியா அதிரடியாக விளையாடாததே அதிக ரன்கள் எடுக்க முடியாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதே காரணத்தைக் கூறி விமர்சித்துள்ள இர்பான் பதான், இது அணிக்குப் பாதகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.