India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
+2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. அடுத்த என்ன படிக்கலாம்?, விண்ணப்பிப்பது எப்படி? என மாணவர்களுக்கு நிறைய குழப்பம் இருக்கும். இதற்கு பள்ளிக்கல்வி துறை சார்பில் ‘14417’ என்ற தகவல் மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி விவரம், விண்ணப்பிக்கும் முறை, ஃபீஸ், உதவித்தொகை போன்ற தகவல்களை மாணவர்கள், இந்த நம்பருக்கு அழைத்து பெறலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களும் இந்த நம்பரில் அழைத்து வழிகாட்டுதல் பெறலாம்.
நாடு முக்கியமான காலகட்டத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என PM மோடி வலியுறுத்தியுள்ளார். மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என PM கேட்டுக்கொண்டுள்ளார். போலிச் செய்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும், உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் டெல்லியில் பல்வேறு துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், தர்மசாலாவில் மே 11-ம் தேதி நடைபெறவிருந்த MI – PBKS இடையிலான போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டுக்கும் இடையே மோதல் தொடர்வதால், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருதி, போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
திமுகவில் மூத்த அமைச்சரான துரைமுருகன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறையை அவரிடம் இருந்து பறித்து ரகுபதியிடம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். அவருக்கு சட்டத்துறை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு, சொத்து குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து என துரைமுருகனுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
போர் பதற்றம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 5 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், நாடுமுழுவதும் விமான சேவைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹3,000 உயர்ந்துள்ளது. கடந்த 4-ம் தேதி ₹8,755-க்கு விற்கப்பட்ட 22 கேரட் தங்கம் இன்று (மே 8) ₹9,130-க்கு விற்பனையாகிறது. ₹70,040-க்கு விற்பனையான ஒரு சவரன் ₹73,040-ஆக அதிகரித்துள்ளது. இம்மாதத்தின் முதல் வாரத்தில் சரிவைக் கண்ட தங்கம் 2-வது வாரத்தில் ஏறுமுகத்தில் இருப்பதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடிக்க மும்பை அணி 217 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் சூர்யவன்சியையும், 2-வது ஓவரில் ஜெய்ஸ்வாலையும் இழந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் ராஜஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு MI சென்றது.
பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளுக்கு இந்த மாதம் தமிழகத்தில் 7 நாள்கள் விடுமுறையாகும். அதன்படி, மே 1 இன்று பொது விடுமுறை. வருகிற 4-ம் தேதி ஞாயிறு என்பதால் அன்றும் வங்கிகள் திறக்கப்படாது. இதேபோல், வரும் 10, 11-ம் தேதிகள், 18, 24, 25-ம் தேதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அன்றைய நாள்களும் வங்கிகள் திறக்கப்படாது. ஆதலால் வங்கி செல்ல இருப்போர், திட்டமிட்டு செல்லும்படி வலியுறுத்தப்படுகிறார்கள்.
➤மேஷம் – உதவி ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – பணிவு ➤கடகம் – சுபம் ➤சிம்மம் – அசதி ➤கன்னி – பாசம் ➤துலாம் – பிரீதி ➤விருச்சிகம் – தனம் ➤தனுசு – பக்தி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நட்பு ➤மீனம் – நலம்.
நடப்பு சீசனில் CSK-வின் கோப்பை கனவு சுக்குநூறாக உடைந்தது. தோனியின் கோப்பை கனவு கலைந்தது போல் கால்பந்து நட்சத்திரங்களின் கோட்டையும் அதேநாளில் தகர்ந்துள்ளது. சவுதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ தலைமையிலான அல்-நசர் அணியும், கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான இண்டர்- மியாமி அணியும் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டன.
Sorry, no posts matched your criteria.