India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகி பல நாள்கள் கடந்தும், இதுவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து EPS உடன் பியூஷ் கோயல் மற்றும் நயினார் நாகேந்திரன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் அமித்ஷாவுடன் EPS ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் விரைவில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாதகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய பேரியக்கம் அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. அதில், தமிழ் தேசியத்தை காக்க நாதகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது என சீமான் வரவேற்றுள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக PM மோடியுடன் நெதன்யாகு பேசியுள்ளார். தனது இனிய நண்பர் மோடியுடன் பேசியதாகவும், எங்கள் பக்கம் நிற்கும் அவருக்கு நன்றி எனவும் நெதன்யாகு கூறியுள்ளார். கடந்த மாதம் 2 நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற PM மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $66 உயர்ந்து $5,344-க்கு விற்பனையாகிறது. ஆனால் வெள்ளியின் விலை $3 குறைந்து $90-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று இந்திய சந்தையில் குறைந்திருந்த தங்கம் விலை நாளை தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

வாட்டி வதைக்கும் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் வானிலை நிபுணர்களின் எச்சரிக்கை அதிர வைத்துள்ளது. இந்தாண்டு கோடைக்காலம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என்றும், ஜூன் முதல் படிப்படியாக பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை உயர்ந்து <<13058352>>அக்டோபரில் EL-NINO நோக்கி நகரும்<<>> என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் TN-ல் வெப்பத்தின் தாக்கம் மார்ச், ஏப்ரல் மாதங்களை விட மே, ஜூனில் உச்சம் தொடும் என கூறியுள்ளனர்.

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் கமேனியின் மனைவி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிப்.28-ம் தேதி அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த கமேனியின் மனைவி மன்சூர் கோஜஸ்தே பாகர்சாதே கோமா நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 1964-ம் ஆண்டு தனது 17 வயதில் கமேனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு(LNG) ஆலையான ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக LNG உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக கத்தார் எரிசக்தி துறை அறிவித்துள்ளது. உலகின் 20% LNG உற்பத்தி கத்தாரிடம் இருப்பதால், அதன் விலை சர்வதேச அளவில் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

பாஜக, அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. EPS-ஐ சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி என அக்கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை தற்காலிக சஸ்பெண்ட் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேவராஜன் அறிவித்துள்ளார். இதனால் EPS மற்றும் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

போர் நடைபெறும் பஹ்ரைன், சவுதி நாட்டு தலைவர்களுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதனையடுத்து பஹ்ரைன் மற்றும் சவுதி மீதான தாக்குதலை கண்டிப்பதாக X தளத்தில் பதிவிட்டுள்ள PM, இந்தியா அவர்களுக்கு துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுத்த அவர்களுக்கு மோடி நன்றியும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.