News October 19, 2025

இனி Whatsapp-ல் இந்த தொல்லை இல்ல; புது அப்டேட்!

image

Whatsapp-ல் நிறைய Ad மெசேஜஸ் வருதா? இந்த தொல்லையை தீர்க்கும் நோக்கில் Whatsapp தற்போது புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறதாம். இதில், நீங்கள் ரிப்ளை செய்யாமல் வைத்திருக்கும் நபர் (அ) நிறுவனங்களை Whatsapp நிறுவனம் கண்காணிக்கும். பிறகு, உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும். கூடிய விரைவில் இந்த அப்டேட் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE.

News October 19, 2025

₹35,400 சம்பளம்; 2,570 பணியிடங்கள்; முந்துங்க!

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் அக்.30 தொடங்கி நவ.30 உடன் முடிவடைகிறது. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>கிளிக்<<>> செய்யுங்கள். SHARE.

News October 19, 2025

₹5,000.. அறிவித்தது தமிழக அரசு

image

வடகிழக்கு பருவமழை 2 நாளுக்கு முன் தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ₹5,000 வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

மதியம் வரை மழை வெளுக்கும்

image

பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், தென்காசி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை இடியுடன் கூடிய மழை வெளுக்கும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, தீபாவளி பர்சேஸ் செய்ய நினைத்தால், மதியத்திற்கு மேல் செல்லுங்கள்.

News October 19, 2025

மில்லியன் கணக்கான உயிரை காப்பாத்திருக்கேன்: டிரம்ப்

image

ஒவ்வொருமுறை போரை நிறுத்தும்போதும் அடுத்த போரை நிறுத்தினால் நோபல் பரிசு தருவார்கள் என தன்னிடம் பலர் சொல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவரை 8 போரை நிறுத்தி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காத்திருக்கிறோம் என்ற அவர், ஆனால் தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஏதோ ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசு கொடுத்ததாகவும், அவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் அருமையானவர் எனவும் கூறியுள்ளார்.

News October 19, 2025

BREAKING: 11 பேர் அதிரடி நீக்கம்

image

அண்ணா பல்கலை.,யில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நேற்று அண்ணா பல்கலை.,யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இவர்கள் 11 பேரும் பேராசிரியர்களாக தொடர்வார்கள் எனவும் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக உயர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News October 19, 2025

கார் விபத்தில் சிக்கினார் Ex CM

image

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உத்தராகண்ட் Ex CM ஹரிஷ் ராவத்தின் கார் விபத்தில் சிக்கியது. நேற்று (அக்.18) இரவு 7.30 மணிக்கு ஹரிஷின் கார் கரோலி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரின் குறுக்கே அடையாளம் தெரியாத நபர் ஒரு வந்துள்ளார். இதனால் Sudden Brake அடிக்க, கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இவ்விபத்தில் இருந்து ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்

News October 19, 2025

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால்.. திருமா

image

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால் இதை தீபாவளியாக கொண்டாடுவார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுக்கு நேர் எதிராக இருக்கும் ஒரே கட்சி என்றால், அது விசிகதான் எனக் கூறினார். மேலும் திமுக கூட்டணி வலுவாக இருப்பதற்கு விசிக முக்கிய காரணம். இதை உடைக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விசிக செயல்படுவதுபோல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.

News October 19, 2025

தீபாவளி ஸ்பெஷல்: அவல் கேசரி செய்வது எப்படி?

image

*தேவையானவை: அவல்- 2 கிண்ணம், நாட்டு சர்க்கரை- 1 கிண்ணம், நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி *செய்முறை: அவல், முந்திரியை 2 தேக்கரண்டி நெய்விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் அவல் கேசரி ரெடி. SHARE IT.

News October 19, 2025

பிரபலம் காலமானார்! கண்ணீர் அஞ்சலி

image

நோபல் பரிசு வென்ற உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் சென் நிங் யாங்(103) காலமானார். சீனாவை சேர்ந்த இவர், தனது Particle physics ஆய்வுக்காக 1957-ல் நோபல் பரிசை வென்றிருந்தார். 1964-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதிலும், சீன கலாச்சாரத்தின் மீது கொண்ட பற்றால், 2015-ல் அதனை துறந்து மீண்டும் சீனாவுக்கு குடிபெயர்ந்தார். இவரது மரணம் இயற்பியல் துறைக்கு பெரிய இழப்பு என விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!