India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுங்கச் சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ₹1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில், ஹைவேக்களில் PPP மூலம் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் டோல்கேட்கள் செயல்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் சுமார் 1000 டோல்கள் உள்ளன. Fastag வாயிலாக தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், GNSS சிஸ்டம் அமலில் இல்லை என்றார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் கரம்வீரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிட வைத்துள்ளது. தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ரயில் நிலையங்களில் இதுவரை 5 பேரை அவர் கொலை செய்துள்ளார். இதில் 4 பேர் பெண்கள். அனைவரும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் தனி கோச் தான் ராகுலின் டார்கெட். தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து தாக்குவதுதான் இவரது பாணி. ஓடும் ரயில்களிலும், ரயில்வே ஃபிளாட்பார்ம்களில் மட்டுமே தூங்குவதால் அவரை பிடிப்பது போலிசுக்கு சவாலாக இருந்துள்ளது. பல மாநில போலீசாருடன் தேடுதல் வேட்டையை நடத்தி, குஜராத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள 2,000 CCTV-களை ஆராய்ந்து ராகுலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தம்பதிகளின் முகம் முதலில் தெரிந்தால்: மிகவும் Logical thinking கொண்டவராக இருப்பீர்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவராகவும், பிறரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பீர்கள். தோல்வி அடையவே கூடாது என நினைப்பீர்கள் *மரம் முதலில் தெரிந்தால்: உள்ளுணர்வு அடிப்படையில் செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களை கவர்ச்சிகரமாக காட்டிக்கொள்ள விரும்புவீர்கள். பிறரை நம்புவதில் உங்களுக்கு தயக்கம் அதிகளவில் இருக்கும்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை திருவள்ளூர் மற்றும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் வழக்கம் போல செயல்படவுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அம்மாவட்டத்தில் விடுமுறை என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு ஆட்சியர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேதியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் திருவள்ளூரில் இன்று விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினின் மிக பெரிய சாதனையை முறியடிக்கும் விளிம்பில் இருக்கிறார். ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்டில் இன்னும் 283 ரன்களை எடுத்தால் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையின் ஜெய்ஸ்வால் படைத்து விடுவார். சச்சின், 2010ல் 14 போட்டியில் 7 சதம் அடித்து 1,562 ரன்களை அடித்திருந்தார். ஜெய்ஸ்வால், 12 போட்டியில் 3 சதம் உட்பட 1,280 ரன்களை விளாசி உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
மத்திய அரசின் நடவடிக்கையால் பருப்பு ரகங்களின் விலை உயரவில்லை என மினிஸ்டர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லரை விலை உயராமல் இருக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் அவ்வப்போது மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் சந்திப்பு நடத்துவதாகக் கூறினார். இதனால்தான் துவரம், உளுந்து, மைசூர் பருப்புகளின் விலை 3 மாதங்களாக உயரவில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.