India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரஷ்ய அதிபர் புடின் தன் பிரத்யேக விமானமான ‘Flying Kremlin’-ல் இந்தியா வந்துள்ளார். அவர் வந்த இந்த விமானம் தான், இன்று உலகிலேயே அதிகம் டிராக் செய்யப்பட்ட விமானம் என, விமானங்களை டிராக் செய்யும் இணையதளமான Flight Radar 24 தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் புடினின் விமானத்தை Live ஆக இன்று கண்காணித்து வந்ததாகவும் கூறியுள்ளது.

வார விடுமுறையையொட்டி நாளை (டிச.5) முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள். சற்றும் தாமதிக்காமல் டிக்கெட் புக் செய்ய இங்கே <

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மாவை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே தமன் இசையில் படத்தில் வரும் ஒரு குத்து பாடலில் ஜேசன் சஞ்சய் கேமியோ டான்ஸ் செய்திருக்கிறாராம். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் இணைந்து சிறு வயதில் ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்தார்.

நள்ளிரவு 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பொழியுதா? கமெண்ட் பண்ணுங்க

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

2025-ம் ஆண்டின் கடைசி முழுநிலவு உலகம் முழுவதும் காணப்பட்டு வருகிறது. பூமிக்கு மிக அருகில் வருவதால், வழக்கமான முழுநிலவை விட பிரம்மாண்டமாக பிரகாசித்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களும், தங்களது போன்களில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்பிறகு 2042 வரை இவ்வளவு நெருக்கமாக நிலவை பார்க்க முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தது கண்டத்திற்குரியது என EPS சாடியுள்ளார். தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக திமுக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது என்றும், சில அதிகாரிகளும் இத்தகைய கோர்ட் அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அராஜகப் போக்கை கைவிட்டு கோர்ட் உத்தரவை நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை ₹17,963 கோடி மதிப்பில் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. டீசல், எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை விட அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் அதிக திறன் கொண்டவைகளாகவும் இருக்கும். இது போன்ற கப்பல்களை இந்தியா உருவாக்கும் போது, அதை இயக்க திறன்பெற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக குத்தகைக்கு எடுக்கப்படுகிறது.

கும்பலாக நண்பர்களுடன் சுற்றுலா செல்வது என்பது நினைவில் நிற்கும் ஒரு அழகான அனுபவம். பயணத்தின் ஒவ்வொரு நொடியும், கலகலப்பும், புதிய இடங்களை பார்க்கும் உற்சாகமும் கலந்ததாக இருக்கும். புது உணவுகளை சுவைத்து, புகைப்படங்கள் எடுப்பது, பயணத்தை மேலும் இனிமையாக்கும். எந்தெந்த இடங்களுக்கு கும்பலாக செல்லலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

தொடர் கனமழை காரணமாக சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை டெங்குவால் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் 25 – 30 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துங்கள், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுங்கள்.
Sorry, no posts matched your criteria.