India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சில்க் ஸ்மிதா.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் கனவுக்கன்னி. அழகு குறிப்புகள் அவருக்கு தேவைப்பட்டதில்லை, ஆனால் அழகு பற்றிய குறிப்பில் அவர் பெயர் என்றைக்கும் நிலைத்திருக்கும். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, பலரும் பார்த்திராத சில்க் ஸ்மிதாவின் அறிய புகைப்படங்கள் சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணவும்.

சையது முஷ்டாக் அலி தொடரில், கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல் 45 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். தமிழ்நாட்டுக்கு எதிரான போட்டியில் அவர் 10 பவுண்டரிகள் & 6 சிக்ஸர்களுடன், 46 பந்துகளில் 102 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் கர்நாடகா 245/3 ரன்களை குவிக்க, தற்போது தமிழ்நாடு அணி இமாலய ஸ்கோரை சேஸ் செய்து விளையாடி வருகிறது.

புயல் மற்றும் கனமழையால் மாநிலம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். மழைநீர் வடிந்தபிறகு சேதமடைந்த பயிா்கள் குறித்து முழுமையாக கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று கூறிய அவர், சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 நிவாரணம் வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜ்பவன், ‘மக்கள் பவன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பற்றி பேசிய சிபிஎம் பெ.சண்முகம், ‘கொடிய விஷமுள்ள பாம்புக்கு கூட நல்ல பாம்பு என்று தான் பெயர். நல்ல பாம்பு என்று சொல்வதால் அதற்கு விஷமில்லை என்று அர்த்தம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். ராஜ் பவனை, மக்கள் பவன் என மாற்றியதால் அவர்கள் குணம் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SIR மூலம் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை அளிக்க கூடாது என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை ECI படுகுழியில் தள்ளுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், ECI & மத்திய அரசை கண்டித்து நாளை (டிச.3) காலை 8 மணி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவுக்காக வாக்கு சேகரிப்பேன் என மன்சூர் கூறியிருந்தார்.

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது. நேற்று 34 காசுகள் சரிந்த நிலையில், இன்றும் 31 காசுகள் சரிந்து ₹89.92 ஆக உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதன் நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்ய நேரிடும் என்பதால், விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

கடந்த செப்.27-ல், கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையை CBI நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கரூர் CBI அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணி முதல் நேரடியாக மனு அளிக்கலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். முன்னதாக, தவெக தலைமை நிர்வாகிகளிடம் CBI விசாரணை நடத்தியது.

ஓய்வு பெற்று விட்டாலும், உலக கிரிக்கெட்டின் முக்கிய ஸ்டாராகவே தோனி திகழ்கிறார். அவரின் ஒரு போட்டோ வெளியானாலும், அன்றைய தினம் அதுதான் ட்ரெண்டிங். பெங்களூருவில் நடைபெற்ற கின்லே நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் எடுத்து Selfie வைரலாகி வருகிறது. மீண்டும் ‘தல’ தோனியை கிரவுண்டில் பார்க்க, எப்போது மார்ச் மாதம் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.