India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரன்யா ராவ். இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் DRI, ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில், அவர் மொத்தமாக 127 கிலோ தங்கத்தை கடத்திய அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.22) கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. கிராம் ₹172-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,72,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில்(நவ.17) கிலோ ₹1,73,000-க்கு விற்பனையான வெள்ளி வார இறுதி நாளான இன்று ₹1,000 குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இதே விலை நீடிக்கும்.

அமித்ஷா டிசம்பர் இறுதிக்குள் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விசிட்டில் கூட்டணி, சீட் ஷேரிங் பற்றி இறுதி செய்வதோடு, தவெக தரப்பிடம் கூட்டணி பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 3 நாள்கள் சென்னையிலேயே அவர் முகாமிட ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். அமித்ஷா பேச்சுவார்தை நடத்தினால், விஜய் கூட்டணிக்கு பிடிகொடுப்பாரா?

இந்திய ரயில்வேயில் 3,058 Ticket Clerk, Accounts Clerk காலிப் பணியிடங்கள் உள்ளன. Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ₹20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நவ.27-க்குள் <

நெல்லை பணக்குடியில் இன்று சீமான் தலைமையில் நடக்கவிருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போராட்டத்திற்காக பணக்குடி சென்ற நாதகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, தடையை மீறி தேனியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தியதுபோல், இன்றும் போராட்டம் நடக்கும் என நாதகவினர் கூறுகின்றனர்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வெள்ளக்கிணறு பேரூராட்சி Ex தலைவருமான வெ.நா.பழனியப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். இவர், திமுகவில் பொதுக்குழு உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் அவைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்துள்ளார். வெ.நா.பழனியப்பன் மறைவுக்கு Ex அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

EPS-தான் <<18337497>>மதுரை மெட்ரோ<<>> ரயிலை துவக்கி வைக்கவேண்டும் என மதுரை மீனாட்சியும், மதுரை மக்களும் விரும்புவதாக செல்லூர் ராஜு கூறியுள்ளார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற அவர், MGR காலத்தில் இருந்தே திமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்தது இல்லை என்றும் பேசியுள்ளார். மேலும், திமுக நினைத்திருந்தால் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை சரியாக அனுப்பியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

EPS-தான் <<18337497>>மதுரை மெட்ரோ<<>> ரயிலை துவக்கி வைக்கவேண்டும் என மதுரை மீனாட்சியும், மதுரை மக்களும் விரும்புவதாக செல்லூர் ராஜு கூறியுள்ளார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற அவர், MGR காலத்தில் இருந்தே திமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்தது இல்லை என்றும் பேசியுள்ளார். மேலும், திமுக நினைத்திருந்தால் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை சரியாக அனுப்பியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலம் கருமந்துறை பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன் தனது விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பியபோது அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். நிலத்தகராறு விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று(நவ.22) சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,630-க்கும், சவரன் ₹93,040-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் சூழலிலும், இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவே நம்மூரில் தங்கம் விலை, மீண்டும் உயர காரணம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.