India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேற்று தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடர்பான புகார்களை மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வர சென்னையில் ‘தேர்வு கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது. இது காலை 8 மணி – இரவு 8 மணி செயல்படும். 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. SHARE IT..

பெரிய கோடீஸ்வரர்களின் வீட்டுக்கு மட்டுமே விஜய் செல்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஏழை வீட்டு கல்யாணத்துக்கு விஜய் போயிருக்கிறாரா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவர் பணக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு தான் போவார் என்று விமர்சித்தார். 7 தயாரிப்பாளர்களை உருவாக்கிய விஜய், தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தை SAC-ஐ தயாரிப்பாளர் ஆக்காதது ஏன் எனவும் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <

உடலில் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க அம்மான் பச்சரிசி கீரை சாப்பிடுவது சிறந்தது. *அந்த கீரையுடன் மிளகு(3), வேப்பிலை(5) சேர்த்து அரைத்து அதிகாலையில் 48 நாள்களுக்கு குடித்தால் ரத்தம் சுத்தமாகும் *அதேபோல சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும் *அந்த கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து 18 நாள்கள் குடித்தால் தாய்பால் அதிகமாகச் சுரக்கும்.

வளைகுடா நாடுகளை ஈரான் தாக்குவதால், அங்கு கல்வி, பணிக்காக சென்ற தமிழர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், துபாயில் மாட்டிக் கொண்டுள்ள நடிகர் வசந்த் ரவி தனது SM-ல், எதிர்பாராதவிதமாக துபாயில் கூடுதல் நாள்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். போர் சூழலால் இதயம் கனத்து போயிருப்பதாகவும், இத்தருணத்தில் அமைதிக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

*உலக வனவிலங்கு நாள் *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிப்பு *1940 – வரலாற்றாய்வாளர் கடம்பி மீனாட்சி நினைவு நாள் *1941 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் *1944 – பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் *1985 – நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் *2011 – விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளிப்பது பற்றி TN அரசு மார்ச் 4.ல் பதிலளிக்க மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதை X பதிவில் சுட்டிக்காட்டியுள்ள நயினார், திமுக அரசு தனது தவறை உணர்ந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இனியும் இந்துக்களின் உரிமையை முடக்க திட்டமிட்டால், கோர்ட் வழங்கும் இறுதிதீர்ப்பின் போது திமுக அரசு முற்றிலும் முடங்கும் என கூறியுள்ளார்.

*விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்வது தான் ஜனநாயகத்தின் அடித்தளம். விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது *நம் ஒவ்வொருவரிடமும் நற்பண்புகளும் உள்ளன; தீயப் பண்புகளும் உள்ளன. நற்பண்புகள் மீது கவனம்செலுத்தி உழைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுகிறார்கள் *எதையாவது கனவு காண்பதற்குப் பதிலாக, மிகச் சிறந்தவற்றைச் செய்ய வேண்டுமென்று கனவு காணுங்கள்.
Sorry, no posts matched your criteria.