India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தேர்தலில் வெற்றிபெற்று EPS ஆட்சியமைப்பார்; அதிமுக ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என விஜய் அறிவித்தபின் தமிழக அரசியல் களமே மாறியிருக்கிறது. குறிப்பாக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு என்று தொடர்ந்து பேசி வரும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விஷயங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தவறாமல் முடித்து விடுங்கள். ✱பான் ஆதார் இணைப்பு ✱2024–25 நிதியாண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் ✱மலிவு விலையில் வீடு கட்டி கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பித்து விடுங்கள் ✱இவற்றுடன் 2025–26 நிதியாண்டுக்கான 3-ம் தவணைக்கான Advance Tax செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும்.

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோர் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எண்ணுவதாக OPS தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிணைவது குறித்து பொதுக்குழு நடத்துவோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். EPS தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் <<18520304>>நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில்<<>> ஒன்றிணைப்பு தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை.

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதித் துறைக்கே சவால் விடும் திமுக அரசின் ஆதிக்க மனப்பான்மைக்கு கண்டனம் ➤விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ➤கோவை, மதுரை மெட்ரோவுக்கு அனுமதி வேண்டும் ➤SIR பணிகளுக்கு வரவேற்பு ➤TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக EPS-ஐ அங்கீகரித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் EPS-க்கு வழங்கப்படுகிறது எனவும், கூட்டணிக்கு மேலும் சில புதிய கட்சிகள் வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் எதிரிகள், துரோகிகளின் விமர்சனங்களை கடந்து செல்லும் EPS-யிடம் அசாத்திய துணிச்சலை பார்ப்பதாக செம்மலை கூறியுள்ளார். ஆளுங்கட்சி திட்டமிட்டு அதிமுகவை பலவீனப்படுத்துவதாக கூறிய அவர், பொதுக்குழு கூட்டத்தில் EPS-ன் உரையால் கட்சிக்கு உத்வேகம் பிறக்கும் எனவும் பேசியுள்ளார். தூங்காமல் களப்பணிகளை செய்துவருவதாக CM கூறுவது பொய் எனவும், EPS தான் CM-ஐ தூங்கவிடாமல் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக EX அமைச்சர் KP முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள KP முனுசாமி, EPS மீது அதிருப்தியில் உள்ளதாக அண்மைக் காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

EPF கணக்கிலுள்ள தொகைக்கு வழங்கப்படும் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போதுள்ள 8.2% வட்டி, ஜனவரி முதல் 8.7% வரை உயர்த்தப்படலாம். இது நடந்தால், EPF கணக்கில் ₹5 லட்சம் வைத்திருப்பவருக்கு சுமார் ₹42,000 வட்டியும், ₹6 லட்சம் வைத்திருந்தால் ₹50,000 வட்டியும் கிடைக்கும். உங்கள் EPF பேலன்ஸை தெரிந்துகொள்ள 7738299899 நம்பருக்கு ’EPFOHO UAN’ என SMS அனுப்புங்கள். SHARE.

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.

சென்னை வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்ற EPS-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அனுமதி கடிதம் இல்லாதவர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து பலர் கீழே விழுந்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்ததால் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.