News November 25, 2025

இன்னும் 50 நாட்களில் ‘பராசக்தி’

image

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் ஜன.14 பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், திரையரங்குகளை பராசக்தியின் புயல் ஆட்கொள்ள இன்னும் 50 நாள்களே உள்ளதாக கூறி, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனிடையே, GV பிரகாஷ்குமார் இசையில் படத்தின் 2-வது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

News November 25, 2025

இன்னும் 50 நாட்களில் ‘பராசக்தி’

image

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் ஜன.14 பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், திரையரங்குகளை பராசக்தியின் புயல் ஆட்கொள்ள இன்னும் 50 நாள்களே உள்ளதாக கூறி, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனிடையே, GV பிரகாஷ்குமார் இசையில் படத்தின் 2-வது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

News November 25, 2025

மாவட்ட செயலாளர்களுடன் EPS முக்கிய ஆலோசனை

image

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக மாவட்ட செயலாளர்களுடன் EPS ஆலோசனை நடத்தினார். SIR படிவங்களை நிரப்ப பூத் கமிட்டி நிர்வாகிகள் களத்தில் இருக்க வேண்டும் எனவும், முறைகேட்டில் ஈடுபடும் திமுகவினர் குறித்து தேர்தல் அலுவலகத்தில் புகாரளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். களத்தில் அதிமுக பூத் நிர்வாகிகளே இல்லை என திமுக விமர்சித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

News November 25, 2025

₹20,000 சம்பளம்.. தமிழகத்தில் 2,417 பணியிடங்கள்

image

தமிழகத்தில் 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான (பெண்கள் மட்டும்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 12th தேர்ச்சியுடன் 2 ஆண்டு துணை செவிலியர் (அ) பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி. சம்பளம்: ₹19,500 – ₹71,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

News November 25, 2025

மேரி மாதாவாக மாறிய காளி தேவி .. சர்ச்சையான PHOTO

image

மும்பை காளி தேவி கோயிலுக்குள் ‘ஜெய் காளி மாதா’ என முழக்கமிட்ட படி சென்ற பக்தர்கள் காளி தேவி, மேரி மாதாவாக மாறியதை கண்டு அதிர்ந்துள்ளனர். கோயிலின் பூசாரியை பிடித்து விசாரித்ததில், காளி தேவி தன் கனவில் தோன்றி, இவ்வாறு அலங்கரிக்க சொன்னதாக விளக்கம் அளித்துள்ளார். பலரும் அளித்த புகாரை தொடர்ந்து, பூசாரி BNS 299 (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

News November 25, 2025

2 – 14% சரிந்த முக்கிய நிறுவனங்களின் பங்குகள்!

image

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவை கண்டுள்ளன. சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 84,285 புள்ளிகளிலும், நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்து 25,944 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. Wipro, Infosys, Nestle, Adani Enterpris உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 2 – 14% வரை சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News November 25, 2025

வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்க CHECK THIS!

image

கூகுளில் வங்கியின் பெயரில் பல போலி வலைதளங்கள் இருப்பதால், பணத்தை இழக்கும் அபாயம் இருந்துவந்தது. இனி அந்த கவலையே வேண்டாம். இதற்கான புதிய விதிகளை RBI கொண்டுவந்துள்ளது. அதாவது, இனி நீங்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஒரிஜினல் வலைதளம் அனைத்தும் ‘bankname.bank.in’ என்ற URL-ல் தான் வரும். இப்படி வரும் வலைதளங்களை மட்டுமே நம்பி Access பண்ணுங்க. யாரும் பணத்தை இழக்காமல் இருக்க SHARE THIS.

News November 25, 2025

சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹174-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1000 குறைந்த நிலையில் இன்று ₹3,000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News November 25, 2025

மோசடி அரசியலை ஒழிப்பது தான் பாஜக திட்டம்

image

திராவிட அரசியலை பேசக்கூடிய கட்சிகளே இல்லை என்பதை உருவாக்குவதுதான் பாஜகவின் செயல் திட்டம் என திருமா பேசியதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். திராவிடம் என்பது நிலப்பரப்பு. திராவிடம் இந்தியாவின் அங்கம். அதை ஓர் இனமாக பிரித்து பேசி முன்வைக்க கூடிய திராவிட அரசியல் என்பது ஏமாற்று வேலை, மோசடி அரசியல். இதை ஒழிப்பதுதான் பாஜகவின் செயல்திட்டம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

News November 25, 2025

பிராமண பெண்கள் குறித்து IAS சர்ச்சை பேச்சு

image

ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்கு கன்னிகாதானம் செய்யும் வரை (அ) காதலிக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என ம.பி.,ஐ சேர்ந்த IAS அதிகாரி சந்தோஷ் வர்மா கூறியுள்ளார். IAS அதிகாரியின் கருத்து பிராமண பெண்களை அவமதிப்பதாக உள்ளதாகவும், அவர் மீது FIR போட வேண்டும் எனவும் பிராமண சமாஜ் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!