India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டெல்லி கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக PoK PM சௌத்ரி அன்வாருல் ஹக் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனிநாடு கேட்கும் பலுசிஸ்தானை இந்தியா தூண்டிவிடுவது தொடர்ந்தால், செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை தாக்குவோம் என முன்பு சொன்னோம். இப்போது, அல்லாவின் அருளால், எங்களுடைய தீரமிக்க வீரர்கள் அதை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீதிக்கட்சி தொடங்கிய நாளையொட்டி X தளத்தில் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்ட, தாய் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என மெய்ப்பிப்போம் என்று கூறியுள்ள அவர், ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.

*ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ பட ஷூட்டிங் வரும் டிச., 8-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. *9 படங்களில் நடித்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. *‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் ஒருவாரம் (டிச.12) தள்ளிப்போவதாக தகவல். *‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தாமதமான நிலையில், வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு. *’ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வால் நடிக்க உள்ளதாக தகவல்.

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிஹார் தேர்தலில், மகளிருக்கு தலா ₹10,000 வழங்கிய அரசின் திட்டம் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 2026 பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், நிதி சூழலை அறிய அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.

பாக்., மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். எல்லைகளில் ஊடுருவியோ (அ) ஆப்கனில் இருந்தோ தாக்கலாம், முழுமையான போரில் கூட ஈடுபடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால், தாங்கள் எப்போதும் அலர்ட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி ம்ன்ம்ன்

<<18255562>>ஆஸ்திரேலியாவில்<<>> சிறார்கள் SM பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் டிச.10 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் அடிப்படையில் Meta நிறுவனம், டிச.4 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய பயனர்கள் FB, இன்ஸ்டா, Threads தளங்களில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், 16 வயதானால் மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகளை காக்கும் இதுபோன்ற சட்டம் இந்தியாவிலும் வர வேண்டுமா? Comment.

நேற்று சவரனுக்கு ₹1,600 அதிகரித்த தங்கம் இன்று(நவ.20) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 2 நாள்களாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது சரிவைக் கண்டுள்ளதால் நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெகவில் ஆதவ் மீது அதிருப்தி அதிகரித்து வருவதாக பேசப்படுகிறது. சமீபத்தில், திமுகவுக்காகவே ஆதவ் தவெகவுக்கு சென்றதாக லாட்டரி மார்டினின் மகன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதவ் மறுக்கவில்லை. ஏற்கெனவே விஜய்யை கேட்காமல் கூட்டணி பேச்சுகளை லீட் செய்ததாக அவர்மீது பலரும் அதிருப்தியில் இருந்தார்களாம். இந்நிலையில், ஆதவ் மீதான சார்ஜஸ் அதிகரித்துகொண்டே போவதால் தலைமையின் ரேடாரில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதிய அமைதி திட்ட வரைவை USA முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், உக்ரைன் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை ரஷ்யாவுக்கு, விட்டுக்கொடுக்கவும், தனது ராணுவ படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்துகிறது. இது உக்ரைனுக்கு பின்னடைவாக இருக்கும் என கூறும் நிபுணர்கள், ரஷ்யாவுக்கு ஆதரவாக USA மறைமுகமாக செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.