India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் விவகாரம், வரும் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்க உள்ளது. பாஜக MP ஹேமமாலினி விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவை கடுமையாக விமர்சித்து பேச உள்ளாராம். மேலும், அவர் தமிழில் பேச உள்ளதுதான் ஹைலைட்டாம். அவருக்கு கவுண்டர் கொடுக்க காங்., தரப்பில் ஜோதிமணி தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக, சிபிஐ விசாரணை செய்யும் வழக்கு குறித்து விவாதிக்க கூடாது. ஆனால், பொதுவாக பேசலாம் என்பதால் சம்பவம் உறுதியாம்.
AUS-க்கு எதிரான முதல் ODI போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு ரோஹித், கோலி விளையாட உள்ளதால், இப்போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், ODI கேப்டனாக கில் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் போட்டி இதுவாகும். IND vs AUS இதுவரை 158 ODI போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் AUS – 84, IND – 58 போட்டிகளிலும் வென்றுள்ளன. 10 போட்டிகள் டை ஆகியுள்ளன.
இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் தொடர்பாக இங்குள்ள வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் நாடுகளுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கம். அந்தவகையில், புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய்யை நேரில் சந்தித்து, அவரது கொள்கைகள், CM ஆனால் என்ன செய்வார் உள்பட பலவற்றை அறிந்து கொள்ள வெளிநாட்டு தூதர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு அனுமதிக்க கோரி, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுத்தியுள்ளனராம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோலிவுட்டில் தொடங்கிய ஸ்ருதியின் நடிப்பு பயணம், ஆங்கில படங்கள் வரை தொடர்கிறது. ‘7 ஆம் அறிவு’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், ‘3’ பட ஜனனியை மறவாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையின் நளினத்தில் மின்னும் இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் எதிரொலியாக, பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளன. நவராத்திரியின் 8 நாள்களில் மாருதி சுசூகி 1.65 கார்களையும், டாடா மோட்டர்ஸ் 50,000 கார்களையும் விற்பனை செய்துள்ளன. அதேபோல் மஹிந்திரா 60%, ஹுண்டாய் 72% அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. மேலும் ஹீரோ, பஜாஜ் போன்ற டூவீலர் நிறுவனங்கள் 2 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு இலங்கை துறைமுகங்கள் எப்போதும் சாதகமான நுழைவு வாயிலாக இருக்கும் என இலங்கை PM ஹரினி அமரசூரியா தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நட்பு, அணுகுமுறையின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும். ஒருவேளை தோற்றால், நியூசிலாந்து உடனான அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதேபோல், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெறும்.
* 1888 – நாமக்கல் கவிஞர் பிறந்தநாள். *1910 – நோபல் பரிசு பெற்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் பிறந்தநாள். *1943 – காச நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது *1953 – நடிகர் மதன் பாப் பிறந்தநாள். *1956 – நடிகர், பேச்சாளர் ஞானசம்பந்தன் பிறந்தநாள். *1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. *2006 – நடிகை ஸ்ரீவித்யா இறந்தநாள். *2023 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இறந்தநாள்.
*பிஹார் தேர்தலில் 5 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்., வெளியிட்டது. *டெல்லியில் 28 JNU பல்கலை., மாணவர்கள் கைது. *நிதி ரீதியாக தன்னிறைவு பெற்ற பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு. *ஹேமந்த் சோரனின் JMM கட்சி, பிஹாரில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு. *ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாக உமர் அப்துல்லா அறிவிப்பு.
Sorry, no posts matched your criteria.