India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகளிர் உலகக் கோப்பை கபடியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. டாக்காவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதல் பாதியில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்தியா, 2-ம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. இறுதியில் இந்தியா 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. சாதனை மகளிருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அடுத்த டிஜிபியை தேர்வு செய்யாதது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசே டிஜிபி பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வழக்கு தொடர்ந்த பிறகே பட்டியலை TN அரசு தயாரித்ததாக விமர்சித்துள்ளார். தேர்வு பட்டியலில் உள்ள 3 பேரும் அரசுக்கு கைப்பாவையாக செயல்படமாட்டார்கள் என்பதாலே இன்னும் டிஜிபி நியமிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான <<18375107>>தர்மேந்திரா<<>> உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு பாலிவுட் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள PM மோடி, இந்திய சினிமாவில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மேந்திரா தனது மாறுபட்ட நடிப்பால் எண்ணற்ற மக்களை கவர்ந்ததாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் நன்மை உள்ள நிலையில், பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா? *வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் *ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது *உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது *ரத்த ஓட்டம் சீராகும் *பற்கள் தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது *ஆன்டி-ஆக்ஸிடண்ட் கண்புரை நோய்களுக்கு உதவுகிறது.

வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள் நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 29-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருங்க நண்பர்களே!

சிறு பொருளுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பள்ளிக்கூடத்து நினைவுகளுடன் பின்னி பிணைந்த சாக்பீஸ், கரும்பலகையில் எழுத மட்டும் தான் என நினைக்கிறோம். ஆனால் அதில், வீட்டை பராமரிப்பதில் இருந்து துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது வரை, பலரும் அறியாத அற்புத பயன்கள் புதைந்துள்ளன! அவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் (நவ.26) புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் பெய்துள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனப்போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக EPS தெரிவித்துள்ளார். அறுவடைக்கு பின்னர் உடனே நெல்லை கொள்முதல் செய்திருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது எனக்கூறிய அவர், கொள்முதல் செய்வதிலும் தாமதம், நெல்லை குடோனுக்கு அனுப்புவதிலும் தாமதம் என்று விமர்சித்துள்ளார். டெல்டாக்காரன் என வீரவசனம் பேசிய CM, விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென்காசியில் <<18373837>>2 பஸ்கள் நேருக்குநேர்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள சிலைகள், ஒவ்வொன்றும் நம்பிக்கை, வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, வானுயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான சிலைகள், கட்டுமான சாதனையாக மட்டுமல்லாமல், தேசத்தின் பெருமையாகவும் உள்ளன. இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள டாப் 10 உயரமான சிலைகள் எங்கெல்லாம் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
Sorry, no posts matched your criteria.