India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹240 குறைந்திருந்த நிலையில், இன்று(டிச.3) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,060-க்கும், சவரன் ₹96,480-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 20.79 டாலர்கள் குறைந்து 4,220 டாலர்களாக விற்பனையாகிறது. ஆனாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ X தளத்தில் 9 மில்லியன் Followers-ஐ இழந்துள்ளார். நவம்பரில் 115 மில்லியன் Followers இருந்த நிலையில், அது 105 மில்லியனாக குறைந்துள்ளது. நவம்பரில் ரொனால்டோ – டிரம்ப் சந்திப்பை தொடர்ந்து, டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளவர்கள், ரொனால்டோவை Unfollow செய்திருப்பார்கள் என கூறப்பட்டாலும், X தளத்தில் Fake ID-க்கள் நீக்கப்பட்டதே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிட்டிருந்த விஜய், தனது முடிவை மாற்றியுள்ளார். தொடர் மழை காரணமாக ‘ரோடு ஷோ’ திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை எனவும், வேண்டுமானால் திடலில் பொதுக்கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் என <<18447638>>அம்மாநில காவல்துறை<<>> கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்காக ஹாஸ்பிடல் சென்றாலும், டாக்டர்கள் முதலில் ‘நாக்கை நீட்டுங்கள்’ என்பார்கள். அது ஏன் என யோசித்தது உண்டா? நாக்கின் தன்மையை வைத்தே உடல் ஆரோக்கியத்தை அறியலாம். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், நாக்கு மஞ்சள் நிறத்திலிருக்கும். உடலில் ரத்த சோகை இருந்தால், நாக்கு வறண்டு போகும். நோய்த்தொற்று அதிகமாக இருந்தால், நாக்கு வெள்ளையாக மாறும். தைராய்டு இருந்தால், நாக்கு பெரிதாகும்.

நமது கையெழுத்தை அச்சு அசல் அப்படியே போடும் ஒரு நவீன கருவியே Auto Pen. இதை USA-வில் பைடன் உள்பட பல அதிபர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், Auto Pen வசதி மூலம் பைடன் கையெழுத்திட்ட அனைத்து ஆவணங்களும் செல்லாது என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், பைடன் Auto Pen பயன்படுத்தியதன் மூலம், வயது மற்றும் மனநிலை காரணமாக அவரால் நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது என விமர்சித்துள்ளார்.

செங்கோட்டையன் சேரக்கூடாத இடம் சேர்ந்திருக்கிறார், அவருக்கு தோல்விதான் கிடைக்கும் என நயினார் கூறியுள்ளார். கூட்டணிக்கு என்னை அழைக்கவில்லை என டிடிவி.தினகரன் சொன்னதை பற்றி பேசிய அவர், கூட்டணியில் இருந்து வெளியேறியவரை எப்படி அழைக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், என்ன பிரச்னை வந்தாலும் EPS தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் எனவும், அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Intelligence Bureau எனப்படும் மத்திய உளவுத்துறையில் 362 Multi Tasking Staff பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹18,000 முதல் ₹56,900 வரை தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு: 25 வயது. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: <

செங்கோட்டையனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் தவெகவில் இணையவிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ, அங்கே அரசியல் தலைவர்கள் வருவது வழக்கம்தான். அந்த வகையில், திமுகவின் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், பிப்ரவரிக்குள் தவெகவில் இணைவார்கள் எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், டெல்டா மண்டலத்தை சேர்ந்த முக்கிய தலைவரும் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

முதல் ODI-ல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், இன்று வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ருதுராஜ் தள்ளப்பட்டுள்ளார். இன்றும் அவர் சறுக்கினால், 3-வது ODI-ல் பண்ட், திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் அவரின் இடத்தை பிடிக்கலாம். இந்த வாய்ப்புகளும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் அணிக்கு திரும்பும் வரை மட்டுமே. அவர் வந்தால், இந்த வாய்ப்பும் குறைந்துவிடும். சோதனையை எதிர்கொண்டு சாதிப்பாரா ருதுராஜ்?

சமந்தாவுக்கும், அவரது காதலர் ராஜ் நிடிமொருவுக்கும் கோவை ஈஷா ஆசிரமத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான முதல் நாளே, ராஜ் நிடிமொரு சமந்தாவுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் என தகவல் கசிந்துள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஒரு அழகான வீட்டை சமந்தாவுக்கு பரிசளித்துள்ளாராம். விரைவில் இந்த புது வீட்டில் இருவரும் குடியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.