India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤டிச.1 முதல் உங்கள் ஆதாரில் பெயர், போன் நம்பர் நீக்கப்பட்டு, வெறும் போட்டோ, QR Code மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது ➤அனைத்து விதமான AutoPay வசதியும் ஒரே UPI APP-ன் கீழ் கொண்டுவரப்படும். சில பரிவர்த்தனைகளுக்கு biometric கட்டாயமாக்கப்படலாம் ➤SBI வங்கியின் mCash சேவை டிசம்பர் 1 முதல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது ➤டிச.1 அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என அன்புமணி ஊர்ஜிதமாக கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் தேர்தலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசு செய்யும் தவறுகளையும் பாமக சுட்டிக்காட்டுவதாக அவர் பேசியுள்ளார்.

1950 முதல் 1990கள் வரை அமெரிக்கா – ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) பனிப்போர் காலத்தில், அமெரிக்க ஆதரவு நாடுகள் முதலாம் உலக நாடுகள், சோவியத் யூனியன் ஆதரவானவை 2-ம் உலக நாடுகள் என்றும், 2-லும் சேராத ‘அணிசேரா’ நாடுகள் 3-ம் உலக நாடுகள் எனவும் அழைக்கப்பட்டன. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய, அரசியல் நிலையற்ற ஏழை நாடுகளை குறிப்பதாக ‘3-ம் உலக நாடுகள்’ என்பது மாறிவிட்டது.

RCB அணியின் உரிமை கைமாறவுள்ளது அறிந்த செய்தியே. அந்த அணியை வாங்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது RR அணியும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்னும் RR அணியின் உரிமம் கைமாறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

டிட்வா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, <<18379714>>ரெட் அலர்ட்<<>>, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்

இரட்டை வரி விதிப்பு விவகாரம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில், பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு இன்று மாலையில் இருந்து பஸ் சேவை இயக்கப்படும் என ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாகவே இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, தவெகவை எலி என்றும், அதிமுகவை புலி எனவும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்தவர் என்றும், அவர் எங்கிருந்தாலும் வாழ்க எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

USA அதிபரின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து <<18409306>>19 நாடுகளின்<<>> கிரீன் கார்டுகளை பரிசீலனை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 3-ம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதை நிரந்தரமாக நிறுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். பைடனின் குடியேற்ற கொள்கைகளில் இருந்து முழுமையாக மீண்டுவர இந்த முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Avengers: Doomsday படத்தின் மூலம், Marvel-ன் மிகப்பெரிய ஹீரோ கேரக்டரில் இருந்து கொடூரமான வில்லனாக மாறியுள்ளார் ராபர்ட் டவுனி Jr. அவரை ‘Doctor Doom’ கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ள நிலையில், போட்டோ ஒன்றை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், Ironman & Doctor Doom கைகள் இணைவதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தின் அப்டேட் ஏதாவது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.