News April 1, 2025

22 வயது பெண் ஆணவக் கொலையா?

image

பல்லடம் அருகே 22 வயது பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெண்மணி – வித்யா 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வித்யாவின் உடலை, போலீசுக்கு தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து, காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் அளித்த புகாரில், அப்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

News April 1, 2025

ஜியோ ஹாட்ஸ்டார் இலவச ரீசார்ஜ்.. அவகாசம் நீட்டிப்பு

image

ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது. இதை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மூலம் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.299 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஹாட்ஸ்டார் ஓடிடியை 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என ஜியோ அறிவித்திருந்தது. தற்போது இந்த ரீசார்ஜ் அவகாசத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News April 1, 2025

பயிற்சியாளருக்காக புதிய அவதாரம் எடுத்த பிரக்…!

image

ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள் செய்யும் சிறுசிறு விஷயங்கள் கூட சோஷியல் மீடியாவில் கவனம் பெறும். அப்படித் தான், தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான பிரக்ஞானந்தா தனது பயிற்சியாளர் ராமச்சந்திரன் ரமேஷுக்கு தோசை சுட்டுக் கொடுத்ததும் வைரலாகியுள்ளது. சோஷியல் மீடியாவில் இதனைப் பகிர்ந்த பயிற்சியாளர், ஒவ்வொரு முயற்சியிலும் பிரக் நன்றாக தோசை சுடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

News April 1, 2025

இந்த கொடூர கொலையே சாட்சி: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

image

தி.மலையில் போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், போதைப்பொருட்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி என விமர்சித்த அவர், விளம்பர ஷூட்டிங்கில் வந்து ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

image

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

News April 1, 2025

பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

நிதியாண்டின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவினை கண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 354 புள்ளிகளையும் சென்செக்ஸ் 1390 புள்ளிகளையும் இழந்துள்ளது. கடந்த சில நாள்களாக மேல் நோக்கி சென்று கொண்டிருந்த பங்குச்சந்தை, இன்று சரிவடைந்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

News April 1, 2025

பலாத்காரம் செய்த பாதிரியார்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

பஞ்சாபில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மொஹாலி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தனது வித்தியாசமான அணுகுமுறையால் பிரபலமானவர் ‘இயேசு! இயேசு!’ பாதிரியார் பஜிந்தர் சிங். இவர் வெளிநாட்டு பயணத்துக்கு உதவுவதாக கூறி 2018-ல், அப்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்து, தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளார். இதுபோல பல பெண்களை இவர் வன்கொடுமை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

News April 1, 2025

தமிழக பாஜகவுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்?

image

தமிழக பாஜகவுக்கு அடுத்த வாரம் புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 8 – 10 தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் பெயர்கள் மாநிலத் தலைவர் பதவிக்கும், வானதி சீனிவாசன் பெயர் தேசிய தலைவர் பதவிக்கும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

News April 1, 2025

‘Money heist’ பார்த்து கொள்ளை – சிக்கிய கும்பல்…!

image

கர்நாடகாவில் வங்கிக் கொள்ளை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸை அதிர வைத்துள்ளது. 2024-ல் SBI வங்கியில் 17 கிலோ தங்க நகைகளை சுருட்டிய வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், Money heist உள்ளிட்ட சீரிஸ் பார்த்து கொள்ளையடிக்க பயிற்சி பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றில் மறைத்து வைத்திருந்த அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

News April 1, 2025

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா

image

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் ஆஸி. அணி விரைவில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் புதிய தலைமைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தலைமையில் ஆஸி.யில் 27 ஆண்டுகளுக்கு பிறகும், பாக்.கில் 37 ஆண்டுகளுக்கு பிறகும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது.

error: Content is protected !!