India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2025-ம் ஆண்டு ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதிர்ச்சி, துக்கம், விரக்தி, பெருமை, நம்பிக்கை, மகிழ்ச்சி என கலவையான எமோஷன்களை ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதில் மிக மிக முக்கியமான சம்பவங்களை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். 2025-ம் ஆண்டை ரீவைண்ட் செய்து பார்க்க அவற்றை SWIPE செய்யுங்கள். உங்கள் மனதை உலுக்கிய சம்பவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு <<18510199>>துப்பாக்கியுடன் <<>>வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எல்லா வகையிலும் தவெக பரப்புரைக்கு சிக்கல் ஏற்படுத்துகின்றனர் என புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், மற்ற கட்சிகள் புதுச்சேரியில் இவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சிலவற்றை கொடுத்து உழைக்க வேண்டும் என கூறினார். தற்போது தளபதியின் (விஜய்) குடும்பமாகவே தொண்டர்கள் திரளாக வந்துள்ளதாகவும் கூறி நெகிழ்ந்தார்.

லோக்சபாவில் ‘வந்தே மாதரம்’ விவாதத்தின் போது, பிரிவினை குறித்து கூறும் PM, அது எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது? என்பதை விளக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார். வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் 2003-ல், வெறும் அரை அடி கொண்ட எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அதன் தலை மட்டும் பெரிதாக வித்தியாசமாக இருந்ததால், அது ஏலியனின் எலும்புக்கூடு என வதந்தி பரவியது. ஆனால் சுமார் 15 வருட ஆய்வுக்கு பின் தான் தெரிந்தது, அது ஏலியன் அல்ல, ஒரு பெண் குழந்தையின் எலும்புக்கூடு என்று. 7 மரபணு குறைபாடுகளுடன் பிறந்து, குழந்தை இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

NDA நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இண்டிகோ விவகாரம் குறித்து PM மோடி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். முக்கியமாக, ‘அரசாங்கத்தால் வகுக்கப்படும் விதிகள், விதிமுறைகள் அமைப்பை மேம்படுத்த இருக்க வேண்டும் தவிர, மக்களுக்கு இன்னல்களை உருவாக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுக்கட்சி கூட்டத்திற்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை PY CM ரங்கசாமியிடம், TN CM ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என விஜய் கூறியுள்ளார். TN-ஐ தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸுடன், தவெக கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. அதற்கு அச்சாரமாக கூட்டத்தில் பலரும் ரங்கசாமி-விஜய் சேர்ந்திருக்கும் <<18511214>>PHOTOS<<>> வைத்திருந்தனர்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோஸ் (60 seconds-க்குள்) ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு <

தவெக மீது மறைமுக அரசியல் பழிவாங்கலை விட்டுவிட்டு தேர்தலில் நேரடியாக மோத CM ஸ்டாலினுக்கு தில் இருக்கிறதா என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகம் போலவே புதுச்சேரியிலும் நல்லதொரு மாற்றம் வருமா என மக்கள் ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறினார். அத்துடன், புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி விரைவில் மலரும் எனவும் சூளுரைத்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று தவெக பரப்புரையில், விஜய், CM ரங்கசாமி இருவரும் உள்ள போட்டோ ஃபிரேம் பேசுபொருளாகியுள்ளது. விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரங்கசாமியுடன் நட்பு பாராட்டி வந்தார். புதுச்சேரியில் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதற்கும் CM பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போட்டோ மூலம் கூட்டணி உறுதியாகுமா என தொண்டர்கள் கேட்டு வருகின்றனர். தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையுமா?
Sorry, no posts matched your criteria.