India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

முந்தைய காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என PM மோடி பேசியுள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், புதுச்சேரியை டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்துக்கான ஏடிஎம் போலவே காங்., கருதியதாக கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் பல ஊழல்களையும், குற்றச் சம்பவங்களையும் செய்ததாகவும், அவர்கள் புதுச்சேரியில் ஆட்சியமைக்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் – US போர் பதற்றம் தொடரும் நிலையில், விடுமுறை நாளான இன்றும் வரலாறு காணாத வகையில் தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹325-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 2 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து வெள்ளி விலை ஷாக் கொடுத்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் <<19264222>>பெண் குழந்தைகள் தொடக்கப்பள்ளி ஒன்று வெடித்து சிதறியது<<>>. இந்நிலையில், கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் இச்சம்பவத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 148-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்பாவி சிறுமிகளை கொன்றதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் உள்ள ஆன்டிஜென்களின் அடிப்படையில் ரத்த வகைகள் A, B, AB, O என பிரிக்கப்படுகின்றன. இந்த ரத்த வகை மரபணுக்களின் மூலம் பெற்றோரிடமிருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடமிருந்து வெவ்வேறு மரபணு கலவையை பெறுவதால், சகோதரர்களுக்கு வெவ்வேறு ரத்த வகைகளை உள்ளன. ஆனால் ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே மரபணுக்களைக் கொண்டிருப்பதால், ரத்த வகையும் ஒரே மாதிரியாக உள்ளன.

ஒரு பொண்டாட்டிய வச்சே சமாளிக்க முடியல என ரொம்ப பேர் பொலம்புறத பாத்துருப்போம். ஆனா, 39 மனைவிகளோட ஒருத்தர் வாழ்ந்திருக்காரு. அதுவும் இந்தியாவுல. மிசோரமைச் சேர்ந்த சியோனா சானாதான் அது. உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரரான அவரு, 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரப்பிள்ளைகளோட ஒன்னா வாழ ஒரு அரண்மனையையே கட்டிருக்காரு. செழிப்பா வாழ்ந்த மனுஷன், 2021ம் வருஷம் ரத்த சோகை நோயால இறந்துட்டாராம்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதற்கு புதுச்சேரியே உதாரணம் என PM மோடி பேசியுள்ளார். புதுச்சேரியில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர், இரட்டை இன்ஜின் அரசுகள் புதுச்சேரிக்கு மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் உள்ள இரட்டை இன்ஜின் அரசாங்கம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதாகவும் அவர் பேசியுள்ளார்.

இஸ்ரேல், USA தாக்குதலில் உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டதால் மிக கடுமையாக தாக்குதல் நடத்தி பழிவாங்கப் போவதாக ஈரான் கூறியுள்ளது. இந்நிலையில் ஈரானுக்கு வார்னிங் கொடுக்கும் விதமாக பேசிய டிரம்ப், ஈரான் பதில் தாக்குதல் நடத்தாமல் இருப்பது நல்லது என கூறியுள்ளார். இதை மீறியும் ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இதற்கு முன் பார்க்காத அளவுக்கு பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் தேமுதிக அழைக்கப்படவில்லை. இதனிடையே, 6+1 என கேட்ட பிரேமலதாவிடம், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்களைப் பொறுத்து 8 வரை கொடுப்பதாக ஸ்டாலின் உறுதியளித்தாராம். அதேநேரம், பிரேமலதா அளித்த தொகுதிப் பட்டியலை அறிந்து, ஏற்கெனவே அங்கு காய் நகர்த்திவரும் திமுக & அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனராம். உங்கள் கருத்து என்ன?

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய், விஜய்யை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதே நேரத்தில், ஜேசன் சஞ்சய் முன்பு விஜய்யை Follow செய்துவிட்டு, தற்போது விவாகரத்து வழக்கிற்கு பிறகுதான் Unfollow செய்தாரா என்ற தெளிவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது ஜேசனின் Follow பட்டியலில் விஜய் இல்லை.
Sorry, no posts matched your criteria.