News October 20, 2025
இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்: ராகுல்

தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி பொங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
BREAKING: 7-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 14,420 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், விநாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் வரத்து இருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News October 20, 2025
நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்.. திரையுலகினர் சோகம்

அக்டோபர் மாதம் அடுத்தடுத்த பிரபலங்களின் மறைவால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கடந்த 9-ம் தேதி வார் பட நடிகர் வரீந்தர் சிங் குமான், 11-ம் தேதி நடிகரும் ஒளிப்பதிவாளருமான பாபு, 15-ம் தேதி பாடகியும் நடிகையுமான பாலசரஸ்வதி ஆகியோர் மரணமடைந்தனர். இவர்களை தொடர்ந்து இன்று ‘முதல் கனவே’ பட இயக்குநரும், நடிகருமான பாலமுருகனும் மரணமடைந்துள்ள செய்தி, தீப ஒளி திருநாளில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News October 20, 2025
தீ விபத்தில் அழிந்த பழமையான காமிக்ஸ் ஓவியங்கள்

மஹாராஷ்டிராவில் 1967-ல் தொடங்கப்பட்டது Amar Chitra Katha காமிக்ஸ். இந்த நிறுவனத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது. 4 நாள்களாக போராடிய தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், கைகளால் வரையப்பட்ட கிருஷ்ணர், பாண்டவர்கள் உள்ளிட்ட காமிக்ஸ் ஓவியங்கள் சிதைந்துள்ளன. இது சேத மதிப்பை தாண்டி, பெரிய வலியை கொடுத்ததாக நிறுவனத்தினர் கூறுகின்றனர்.