News September 14, 2024
ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஜான்டி ரோட்ஸ்

மகளுக்கு ‘இந்தியா’ கோவாவில் வாழும் தன்னை ஃபீல்டிங் பயிற்சியாளராக BCCI வேண்டாம் என சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். BCCI சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை, ஆனால் நான் உள்ளூர்காரர்தான், ஒருவேளை கோவாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வேறு ஒரு மெட்ரோ நகருக்கு குடிபெயர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Similar News
News January 5, 2026
மீண்டும் அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

தமிழகம் வந்துள்ள அமித்ஷா, பியூஷ் கோயல் ஆகியோருடன் 2-ம் நாளாக இன்றும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக தரப்பில் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில். மீண்டும் சந்தித்துள்ள எஸ்.பி.வேலுமணி, NDA கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை விரிவாக ஆலோசித்து வருகிறார்.
News January 5, 2026
BREAKING: திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

ED நோட்டீஸை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி (IP) தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2006-11 வரை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ₹2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக IP மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டும், சொத்து முடக்கம் தொடர்பாகவும் ED நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ED-ஐ அணுக உத்தரவிட்டுள்ளது.
News January 5, 2026
BCCI-யிடம் கேப்டன் கில் வைத்த கோரிக்கை!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், BCCI-யிடம் வைத்த கண்டிஷன் பேசும் பொருளாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக, அணியின் வீரர்களுக்கு 15 நாள் பயிற்சி கேம்ப் நடந்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளாராம். தொடருக்கு முன்பாக, வீரர்களின் Focus & உடலை வலுவாக்கும் இது உதவும் என குறிப்பிடப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இந்திய அணியை இது மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.


