News September 14, 2024

ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஜான்டி ரோட்ஸ்

image

மகளுக்கு ‘இந்தியா’ கோவாவில் வாழும் தன்னை ஃபீல்டிங் பயிற்சியாளராக BCCI வேண்டாம் என சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். BCCI சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை, ஆனால் நான் உள்ளூர்காரர்தான், ஒருவேளை கோவாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வேறு ஒரு மெட்ரோ நகருக்கு குடிபெயர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News

News December 4, 2025

தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

News December 4, 2025

திருப்பரங்குன்றம்.. திமுக அரசை சாடிய அண்ணாமலை

image

திருப்பரங்குன்றம் விஷயத்தில், கோர்ட் உத்தரவுகளை எல்லாம் ஒன்றுமில்லை என திமுக அரசு நினைக்கிறதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நூற்றுக்கணக்கான போலீஸை குவித்து, பக்தர்கள் மதச்சடங்கு செய்வதை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் சனாதன தர்மத்தை தனிமைப்படுத்துவதற்கான காரணத்தை திமுக அரசு கூறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

image

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நியமித்துள்ளார். CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலால் துறையின் சேப்பாக்கம் பகுதியின் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். EPS-ன் எடப்பாடி தொகுதிக்கு சேலம் கலால் துறையின் உதவி ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!