News August 20, 2024
இந்தியா-போலந்து உறவு பற்றி தெரியுமா?

இந்தியா-போலந்து இடையே 70 ஆண்டு கால தூதரக உறவு நீடிக்கிறது. மத்திய ஐரோப்பிய பிராந்தியத்தில் போலந்து, இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாகும். 2ஆம் உலகப்போரின்போது (WWII) போலந்தை சேர்ந்த சுமார் 6,000 பெண்கள், குழந்தைகளுக்கு இந்தியாவின் ஜாம்நகர், கொல்காபூரில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
1979-இல், அப்போதைய பிரதமர் மெராஜி தேசாய், போலந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் தற்போது மோடி சென்றுள்ளார்.
Similar News
News August 15, 2025
மாவட்டந்தோறும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி

தமிழக அரசின் சார்பில் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையில் CM அறிவித்த 9 அறிவிப்புகளில் 8-வது அறிவிப்பாக வந்த இது, மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 15, 2025
7 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 7-வது நாளாக குறைந்துள்ளது. கடந்த 8-ம் தேதி ₹75,760-க்கு விற்பனையான 22 கேரட் தங்கம், அதன் பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இன்று 1 கிராம் ₹9,280-க்கும், சவரன் ₹74,240-க்கும் விற்பனையாகிறது. முதல் வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், 2-வது வாரத்தில் சற்று சரிந்துள்ளது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
News August 15, 2025
சுதர்சன சக்ரா மிஷனில் இந்தியா: PM மோடி

கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்திலிருந்து உத்வேகம் பெற்று நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை விரிவுபடுத்துதல் & நவீனமயமாக்கலை நோக்கி நாடு நகரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது சுதந்திர தின உரையில், 2035-க்குள் உள்நாட்டு கண்டுபிடிப்புகள், தற்சார்பு பொருளாதாரம், வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கி சுதர்சன சக்ரா மிஷனில் நாடு இயங்க இளைஞர்கள் உறுதிபூணுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.