India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை தினங்களை முன்னிட்டு வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படும் எனவும் நீரோடைகளில் குளிக்க தடை எனவும் தெரிவித்துள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025 குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஸ் சாப்ரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் கடந்த இரு தினங்களாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்று திருச்சுழி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமில் மொத்தம் 2,183 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக திருச்சுழி சட்டமன்றத் தொகுதி A.R.O அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபுராணி. இவர் குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா முருகன் குடும்பத்திற்கும் முன்பகை இருந்துள்ளது. இதை மனதில் வைத்து, வீட்டில் இருந்தபோது பிரபுராணி, அரவிந்த் உள்பட மூன்று பேரை, சூர்யா, முருகன் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கூமாபட்டி போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசின் நாளைய (25.11.2024) நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி அளவில் கெப்பிலிங்கம்பட்டி சமுதாய கூடம், டி.கடமங்குளம் பயணிகள் நிழற்குடை, கீழ்உப்பிலிக்குண்டு கலையரங்கத்தை திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டான பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சிறப்பு பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் இன்று பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில் மொத்தம் 1481 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பெரியகுளம் கண்மாய் சாலை தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையை தரம் உயர்த்தி, மின் விளக்குகள் அமைத்திட மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதற்கான மனு சிவகாசி பன்னீர் தெப்பத்தில் நாளை 24-11-2024 (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களின் கையொப்பத்திற்காக வைக்கப்படுகிறது. நாளை கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மனுவில் கையெழுத்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசின் நாளைய நிகழ்ச்சி நிரல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் துவங்கும் நிகழ்ச்சியில் கல்லூரணி அங்கன்வாடி மையம் திறப்பு, குச்சனேரிப்பட்டியில் பயணிகள் நிழற்குடை திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.